தூக்கு தண்டணையை ரத்துசெய்யக்கோரி
காஞ்சிபுரம் பெண் தீக்குளிப்பு...
தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோருக்கான தண்டணை நிறுத்தவேண்டும். என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் கலெக்டர்
அலுவலகம் முன்பு ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் பெயர் செங்கொடி
என்று தெரியவருகிறது. மூவருக்குமான தூக்கு தண்டணை ரத்து செய்யப்பட்டு அவர்கள் மூவரும் விடுதலையாகும் வரை
செங்கொடியின் பிரேதத்தை அகற்றப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக பெண் ஒருவர் போராட்டத்தில் இறங்கி தீக்குளித்துள்ளார்.
இதனை அறிந்த மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவரின் தியாகம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக