ஊழல் வாதிகளால்நாடு கொள்ளையடிக்கப்படுகிறது.
தற்போது நாடு ஊழல் வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்த கொள்ளை முடிவுக்கு வந்தால்தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.
நான் டெல்லியில் உண்ணா விரதம் இருந்த போது அதை சீர்குலைக்க
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.
அவர் ஒரு நயவஞ்சகர்.
திகார் ஜெயிலில் நான் இருந்த போது ஜெயில் டி.ஐ.ஜி.யால் எந்த நடவடிக்கையும்
எடுக்க முடியவில்லை. உள்துறை அமைச்சகம் தான் அவருக்கு உத்தரவுகள் பிறப்பித்தது.
தற்போதுதான் ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடங்கி இருக்கிறோம்.
நமது எண்ணம் நிறைவேற இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். அதுவரை போராடுவோம்.
மக்களிடையே சமுக மற்றும் பொருளாதார வேறுபாடு நிலவுகிறது.
டாக்டர் அம்பேத்கரின் கனவு இன்னும் நிறைவேறவில்லை.
ஏழைகளுக்கு நீதி கிடைக்க போராடுவேன்:- அன்னா ஹசாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக