வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 3 செப்டம்பர், 2011

அரங்கேற்றத்தில் உயிரை விட்டார் தந்தை...

                                                            

                         அரங்கேற்றத்தில் உயிரை விட்டார் தந்தை...

 கனடாவில் வசிப்பவர் கதிர்காந்தன். இவரது மகன் துஷ்யந்தன், மகள் சிரோமி
இவர்கள் இருவரும் மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் கற்றுவந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் உள்ள புராகிரஸ் வீதியில் உள்ள
ஒரு கலையரங்கில் இவர்களது அரங்கேற்றம் நடந்தது.

   முதலில் துஷ்யந்தனின் மிருதங்க அரங்கேற்றமும் அதனை அடுத்து சிரோமியின்
பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெறுவதாக இருந்தது.

  அட்டவணைப்படி துஷ்யந்தனின் மிருதங்க அரங்கேற்றம் முடிந்தது.
அந்த அரங்கேற்றத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு நன்றி சொல்லிக்
கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் மகள் சிரோமியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை காணும்
ஆவலோடு உற்சாகம் பீறிட்டபடி இருந்தது அவர் முகத்தில். அந்த நேரத்தில்
நெஞ்சை பிடித்தபடி சாய்ந்தார். கனப்பொழுதில் அவரது உயிர் பிறிந்தது.
மகளின் அரங்கேற்றத்தை காணமுடியாதபடி அவர் உயிர் பிறிந்தது.
அரங்கே சோகத்தில் மிதந்தது.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்