இலங்கையிடமிருந்து இந்தியா கடற்படை பாதுகாப்புக்கான படகுகளை வாங்குகிறது.
வளர்ந்துவரும் வல்லரசாக கருதப்படும் இந்தியா தன் அண்டைநாடான
இலங்கையிடமிருந்து ரூ250 கோடி மதிப்பில் அதிவேக இடைமறிப்பு படகுகளைவாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
80 படகுகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தருவதாக இலங்கையை சேர்ந்த
சார்லஸ் மரைன் என்ற நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை எதிர்கொள்ள
இலங்கை கடற்படை சிறப்பு படையணியை உருவாக்கியிருந்தது.
அதேபோன்று ஒரு படைப்பிரிவை இந்திய கடற்படை உருவாக்கியுள்ளது. இந்த
படைப்பிரிவுக்கான ஆலோசனைகளை இலங்கை கடற்படை கமாண்டோக்கள்,
இந்தியாவிற்கு நேரில் வந்திருந்த அளித்திருந்தினர்.
இந்தியா புதிதாக உருவாக்கியுள்ள சாகர் பரிஹாரிபால் என்ற சிறப்பு படைப்பிரிவுக்காக
இந்த படகுகள் வாங்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக