வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 26 மே, 2012

தேடிவருகின்றனர்

கணவர் இறந்த வழக்கில் தலைமறைவான
பெண்ணை சிவகிரி இன்ஸ்பெக்டர் துரைசாமி தேடிவருகிறார்.

கொடுமுடி அருகே ஏமகண்டனூரைச்சேர்ந்தவர் சசிகுமார்(27)மார்ச் மாதம் 16ம்தேதி அதிகாலை 3 மணி அளவில் தனது வீட்டில் திடீரென இறந்தார்.

இவருக்கு வனிதா(27) என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ஒரு பெண்ணும் உள்ளனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய இவரது சாவில் மர்மம் உள்ளது.

அதிகாலையில் இறந்த இவரது உடலை அவசர அவசரமாக எரித்துவிட்டனர். சசிகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புகார் கூறி அவரது தாயார்
பாப்பாத்தி காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு புகார் அனுப்பியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலிசார் கொடுமுடி நீதி மன்ற அனுமதி பெற்று  இந்தியன் பீனல்கோடு 176ன் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகீன்றனர்.

இதற்கிடையே இறந்துபோன சசிகுமாரின் மனைவிக்கும் செந்தில் என்ற வாலிபருக்கும்தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. போலிசார் இது குறித்தும்
விசாரணையை துரிதப்படுத்தினர்.



இந்நிலையில் இம்மாதம் 18 ம்தேதி வனிதாவும், செந்தில்குமாரும் தலைமறைவாகிவிட்டனர்.

தலைமறைவாகிய இருவரும்  கொடைக்கானலில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் நோட்டீஸ்கள் அடித்து விநியோகம் செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்