வியாழன், 30 ஜனவரி, 2014
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
ஈரோட்டில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் கோலாகலம்
ஈரோடு வ.உ.சி மைதானத்தில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகம்தலைமையில் நடந்தது.
காலை 7 மணிக்கு ஆட்சியர் சண்முகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றபின்னர் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின்னர் அமைதியை வலியுறுத்தும் விதமாக வெண்புறாக்களை வானில் பறக்கவிட்டனர்.
இதன்பின்னர் காவல்துறையினருக்கான குடியரசு தலைவரின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார் ஆட்சியர் சண்முகம். அரசு துறைகளில் சிறந்தமுறையில் பணி செய்ததற்கான விருதுகள் மற்றும் பதக்கங்களையும், தனியார் துறையில் சிறந்துவிளங்குபவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், விளையாட்டுத்துறையில் வெற்றிகளை குவித்த அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் சண்முகம் வழங்கினார்.
பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவுற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)