வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

திங்கள், 15 ஏப்ரல், 2013

கூட்டுறவு வங்கி தேர்தலில் பதற்றம்

                              


 ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையத்தில் உள்ளது கந்தசாமிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பேருந்தில் குண்டு வெடிப்பு எட்டுப்பேர் மரணம்.

                                                         



ஓடும் பேருந்தில் குண்டு வெடித்ததில் பயணிகள் எட்டுப்பேர் மரணம்.

பாகிஸ்தானில்  உள்ள பேஷ்வார் அருகே  உள்ள நகரம் ஒன்றுக்கு பயணிகள்

பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை டிரைவர் ஜாஹாங்கீர்

என்பவர் செலுத்திக்கொண்டிருந்தார். கணிசமான பயணிகளுடன் சென்று

கொண்டிருந்த அந்தபேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு

வெடித்ததில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் எட்டுப்பேர் சம்பவ

இடத்தில் உடல் சிதறி பலியாகினர். ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து  பேஷ்வார் நகர் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ரூ10 ஆயிரம் ஒரு எலுமிச்சம் பழம்



ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கந்தசாமிபாளையம்.

இந்த ஊரில் புகழ் பெற்ற சடையப்பசுவாமிகோயில் உள்ளது.

இந்தக்கோயிலில் வருடந்தோறும் தமிழ் வருடத்தின் முதல் மாதமாக

கருதப்படும் சித்திரைத்திருநாளின் முதல் நாளில் பொதுமக்களுக்கு

அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த 32 ஆண்டாக தொடரும் இந்த நிகழ்ச்சி  இன்று 33 ம் ஆண்டாக நடந்தது.  

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதான விழாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில்  சடையப்பசுவாமியின் பூஜையில் வைக்கப்பட்ட

எலுமிச்சை,  உப்பு, மசாலத்தூள் பாக்கெட்டுகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில்

முதல் எலுமிச்சம் பழம் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. 

இந்தப்பழத்தை உடுமலையைச்சேர்ந்த ஜோதிபிரகாஷ் என்பவர் ஏலத்தில்

எடுத்துள்ளார்.

பக்கங்கள்