வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மரண தண்டனை கூடாது:பில்லாமணி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காஞ்சீபுரம் அருகே செங்கொடி என்ற பெண், இந்த கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளித்து இறந்தார்.

தொடர்ந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அட்டவணைபுதூரை சேர்ந்தவர் பில்லாமணி (வயது 44). வெல்டிங் வேலை செய்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
இவர் நேற்று மதியம் மண்எண்ணெய் கேனுடன் பூனாச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது அவர், திடீர் என்று மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று கோஷங்களை எழுப்பியவாறு அங்கும் இங்கும் ஓடினார்.

இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். பிறகு அவர்கள் பில்லாமணியின் உடலில் எரிந்த தீயை அணைத்து விட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியினர் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயில் அருகில் அமர்ந்து மறியல் செய்தனர்.

அப்போது கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் பாலு, மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோபி, மகளிர் அணி பிரமுகர் புவனா ஆகியோர் திடீர் என மறைத்து கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக்கொண்டே நடுரோட்டுக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடலில் தீ வைத்துக்கொள்ள விடாமல் தடுத்தனர். ஆனாலும் அவர்கள் நடுரோட்டுக்கு வந்து ஆவேசமாக கோஷம் போட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஓடி வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தின் கதவுகளை போலீசார் இழுத்து மூடி பாதுகாப்புக்கு நின்றனர்.

இதனை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சியினர் வெளியே நின்று கோஷம் போட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களில் 35 பேரை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்த பகல் 12 மணிக்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது, மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு எதிரே உள்ள மெட்ரோபாலிட்டன் ஓட்டலுக்குள் மாணவர்கள் ஞானதேசீககலைஞன், ராம்கி ஆகியோர் புகுந்தனர். அவர்கள் மொட்டை மாடிக்கு சென்று முருகன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யாவிட்டால் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற மாணவர்களிடம் மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், மதுரை வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி, தமிழ்நாடு வக்கீல்கள் சங்க மாநில செயலாளர் ஆர்.வெங்கடேசன், இணை செயலாளர் எஸ்.முத்துக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, மாணவர்களின் கோரிக்கை அரசுக்கு எடுத்து சொல்லப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மாணவர்கள் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது 3 பேர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்றி öருடன்

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்