வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 1 டிசம்பர், 2011

ஞாயிறு, 27 நவம்பர், 2011

சம்ப்ரோஷ்ண விழா

                                                               

 சிவகிரி திரு.வி.க தெருவில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி தாயார் சமேத கல்யாண வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு புதிய உற்சவர் திருமேனி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமேனிக்கான சம்ப்ரோஷ்ண விழா நேற்று கோயிலில் நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த சம்ரோஷ்ண விழாவில் ப்ராணபிரதிஷ்டையும், புருஷ்ஸீக்த, ஸ்ரீ ஸீக்ரத, சுதர்ஸன, சகஸ்ரநாம, ஸரனாகதி சத்ய ஹோமங்கள் நடைபெற்றன.

இதனை அடுத்து சுவாமிக்கு திருமஞ்சனமும், அதனை அடுத்து மஹாதீபாரதனையும் நடந்தன. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முற்றுப்புள்ளி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி யூனியன் சேர்மன் தேர்தல் கடந்த மாதம் 29 ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த  யூனியனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களில் 4 பேர் அ.தி.மு.க வைச்சேர்ந்தவர்கள். மீதம் 2 பேர் சுயேட்சைகள்.

பக்கங்கள்