வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 24 அக்டோபர், 2013

ஈரோட்டில் பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம்.



பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஈரோட்டில்
25 நாட்களுக்கு நடக்கிறது.

 சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் இந்த பயிற்சி முகாமில் 21 வயது முதல் 35 வரை உள்ள பெண்கள் இந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.   முகாமில் சிறுதொழில்களை அமைக்க வழி முறைகளை விளக்குதல், திட்ட அறிக்கை தயாரித்தல், புதிய தொழில் முனைவோர்க்கான நிதி உதவிகள், மானியங்கள் பற்றி அரசு துறை அதிகாரிகள், வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

 அத்துடன்  சிறிய மற்றும் குறுந்தொழில்கள் குறித்து  தகுதி வாய்ந்த தொழில் ஆலோசகர்கள், தணிக்கை அதிகாரிகள், வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள்  ஆகியோர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

  பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் கொண்ட குழந்தைகளையுடைய பெண்களுக்கு குழந்தைகளை கவனித்துக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இலவச வாய்ப்பினை பெற விரும்பும் பெண்கள் தங்களது பெயர், முகவரி, கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி கல்வி மற்றும் சாதி சான்றிதழ், புகைப்பட அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உள்ளிட்ட விபரங்களுடன் விண்ணப்பத்தினை இயக்குனர் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் டிஐ கட்டிடம் கிண்டி, சென்னை 600032 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

  விண்ணப்பங்களை பொதுமேலாளர் மாவட்ட தொழில் மையம், சென்னிமலைரோடு, ஈரோடு 638001, மற்றும் ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், சிட்கோ வளாகம் சென்னிமலை ரோடு, ஈரோடு 638001 ஆகிய அ<<லுவலகங்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்