மூப்பனார் தம்பி காலமானார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் நினைவுநாள் நிகழ்ச்சியில்
கலந்துகொள்ளவந்த அவரது தம்பி சம்பத்மூப்பனார்(68) திடீரென காலமானார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் மூப்பனார். இவரது 10வது நினைவு
நாள் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊரான சுந்தரப் பெருமாள் கோயிலிருந்து வந்திருந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டில் தங்கியிருந்தபோது
அவருக்கு திடீரென நெஞ்சுலி ஏற்பட்டது. சென்னை போரூர் ராமசந்திரா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை பயன்தரவில்லை.
மாரடைப்பு தொடர்ந்ததால் மரணமடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக