வருகை தந்தமைக்கு நன்றி.. !

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

வளரும் விக்ரகம்...


                                             


சிவகிரி அருகே சுயம்பாய் எழுந்த விக்ரகம் வளர்வதால் பக்தர்கள்  ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

மகாயாகம்

சிவகிரி அருள்மிகு பழனியாண்டவர் கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு

புதன், 1 ஆகஸ்ட், 2012

கருகும் நிலையில்கரும்பு

                                                                     
வறட்சியின் பிடியில் சிக்கி கருகும் நிலையில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிரை

திங்கள், 30 ஜூலை, 2012

ஒப்பாரி வைத்து அழுதனர்.

   
                                                                 
 சிவகிரி அருகே கிராம மக்கள் மழைவேண்டி

ஞாயிறு, 29 ஜூலை, 2012

திங்கள், 14 மே, 2012

அசத்தும் கலை



என்னதான் அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டாலும் இன்றும் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பல

இன்றைய அறிவியலுக்கு புரியாத புதிராகத்தான் உள்ளன.

அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் ஆடு மாடுகள் வரை

வெள்ளி, 4 மே, 2012

வியாழன், 3 மே, 2012

காவல் நீட்டிப்பு....

 பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான நீதிமன்றக்காவலை நீட்டிப்பு செய்து கொடுமுடி நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்ற வழக்கு குறித்த விசாரணை கொடுமுடி குற்றவியல் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் இரண்டாவது தரப்பு எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்த போலிசார் கடந்த மாதம் கொடுமுடி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவரை மே மாதம் 3 ம்தேதி வரை நீதி மன்றக்காவலில் வைக்கும்படி கொடுமுடி நீதிமன்ற நடுவர் பாபுலால் உத்தரவிட்டார்.

நீதி மன்றக்காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் நேற்று மார்ட்டினை கோவை மத்திய சிறையிலிருந்து கொடுமுடி கோர்ட்டில்
 ஆஜர் படுத்துவதற்காக போலிசார் அழைத்து வந்தனர்.

கொடுமுடி நீதி மன்றத்துக்கு வந்த மார்ட்டினை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞர் பலரும் வந்திருந்தனர்.
 நீதி மன்றத்தில் மார்ட்டினை போலிசார் ஆஜர் படுத்தி விட்டு வரும் போது நீதி மன்ற வளாகத்தில் சந்தித்து
பேசலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் மார்ட்டினை அழைத்து வந்த போலிசார் நீதிபதி முன்பு அவரை ஆஜர் படுத்தி விட்டு மின்னல் வேகத்தில் அழைத்து சென்றனர்.
மார்ட்டின் போலிசாரால் அழைத்து செல்லப்படுவதை அறிந்த அவரது வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க ஓடோடி வந்தனர்.

மார்ட்டினிடம் பேச முயன்றனர். அதனை அனுமதிக்காத போலிசார் அவரை சந்திக்க விட மறுத்தனர். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

மார்ட்டினை சந்திப்பது என்றால் நீதிபதியின் அனுமதியை பெற்றபின்னர் வாருங்கள் அவரை சந்திக்க அனுமதிக்கிறோம்
 என்றனர் போலிசார் இதனால் ஏமாற்றம் அடைந்த வழக்கறிஞர்கள் திரும்பி சென்றனர்.

அதற்குள் தாங்கள் வந்த வேனில் மார்ட்டினை அமர செய்த போலிசார் அவரை அவசகதியில் அழைத்து சென்றனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினை....



பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினை போலிஸ் காவலில் எடுக்க கொடுமுடி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி கொடுமுடி போலிசாரிடம் கொடுமுடியைச்சேர்ந்த ராஜி (51) தழுவம்பாளையத்தைச்சேர்ந்த சுரேஷ்(31)
ஆகிய இருவரும் தனித்தனியாக இரு புகார்களை அளித்தனர்.

புகாரில் தங்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை கொடுமுடியை சேர்ந்த ஹக்கீம் மற்றும்
 சண்முகம் என்பவர்கள் விற்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதன்பேரில் ஹக்கீம் மற்றும் சண்முகம் ஆகிய இருவர் மீதும் கொடுமுடி போலிசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில்   இரண்டாவது குற்றவாளியாக  பிரபல தொழில் அதிபர் மார்ட்டினை சேர்த்தனர். பின்னர் அவரை
 கடந்த வாரம் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

கொடுமுடி நீதிபதி பாபுலால்  தொழில் அதிபர் மார்ட்டினை நீதி மன்ற காவலில் மே மாதம் 3 ம்தேதி வரை   வைத்திருக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்  மார்ட்டினிடம் விசாரணை நடத்தவேண்டும் என கொடுமுடி போலிசார் கொடுமுடி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைக்கு கோவை மத்திய சிறையில் இருந்த மார்ட்டின் அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆறுமுகம் மார்ட்டின்  வருமானம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய
அவசியம் இருக்கிறது.என்று வாதாடினார்.

இதனை எதிர்த்து கொடுமுடி வழக்கறிஞர் சிவக்குமார் அடங்கிய குழுவின் தலைவராகசென்னையைச்சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பிரபாகரன் வாதாடினார். மார்ட்டின் மீதான 16 வழக்குகளில் இதுவரை எங்கும் அவரை போலிசார் தங்கள் கஸ்டடியின் கீழ் விசாரணை நடத்தகோரவில்லை என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் ஏற்கனவே ஏழு மாதங்களாக சிறையில் உள்ளார்.

 முன்னாள் எம்.பி .கே.சி பழனிச்சாமி மீதான வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டியுள்ளது என்று போலிஸ் தரப்பில் கோரப்பட்ட விசாரணை மனுவை சம்பந்தப்பட்ட கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. தவிர தற்போது நடந்துவரும் எம்.என் நடராஜன்(சசிகலாநடராஜன்) வழக்கிலும் போலிஸ் தரப்பு மனுவை சம்பந்தபட்ட கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிபாபுலால் மனு மீதான தீர்ப்பை மாலை 5 மணிக்கு ஒத்திவைத்தார்.
அதுவரை மார்ட்டினை நீதிமன்றத்தில் இருந்த அலுவலக அறையில் போலிசார் அமர வைத்திருந்திருந்தனர்.
மாலை 5 மணிக்கு  நீதிபதி பாபுலால் தனது தீர்ப்பை வாசித்தார்.

போலிஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும், மார்ட்டினிடம் ஒரு நாள் போலிசார்
விசாரணை நடத்திவிட்டு இன்று 26 ம் தேதி மாலை ஐந்து மணிக்கு அவரை மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்  எனவும்  தீர்ப்பளித்தார்.
இதன்பேரில் போலிசார் மார்ட்டினை தங்களது காவலில் எடுத்து அழைத்து சென்றனர்.

 நீதி மன்றத்தை விட்டு போலிசாரால் அழைத்து வரப்பட்ட மார்ட்டினிடம் கொடுமுடி இன்ஸ்பெக்டர் துரைச்சாமி
   என்ன ?மார்ட்டின் எந்த வண்டியில்  வரவிருப்பம்  என கேட்டார். அதற்கு  மார்ட்டின்  நீங்கள்
எந்த வாகனத்தில் வரச்சொல்கிறீர்களோ அதில் வருகிறேன்  என சொன்னார்.

இதற்கு பின்னர் மார்ட்டினை இன்ஸ்பெக்டர் துரைசாமியின் ஜீப்பில் அமர செய்து போலிசார் அழைத்து சென்றனர்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

இறைவனின் திருவடியில்…


                               

உங்கள் பாவங்களை?!.. என்னிடம் கொடுத்து  அந்த கணக்கை முடித்து விடுங்கள் … என்று   சொல்லாமல் சொல்கின்றாரோ கொடுமுடி நாதர்…

 அதனால் தான்  இசையின்…நாயகர் வீற்றிருக்கும் இந்த இடத்திற்கு வந்தாரோ… இசைஞானி… 

சுரங்களின் மத்தியில்...





சுரங்களின் மத்தியில் சர ங்களைக்கண்டதால்(காற்றுக்களின் வகைகளை) உலகை வசப்படுத்த முயல்பவர்

 உமையவள் வடிவுடையநாயகியின்  திருவடியில் வரம்கேட்டு வந்த இடம் கொடுமுடி .

புதன், 15 பிப்ரவரி, 2012

வாழும் கலை?









 







கொடுமுடியில் உள்ள புகழ்பெற்ற மகுடேஸ்வரர்கோயிலுக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்

சனி, 28 ஜனவரி, 2012

நம் கடமை?


போற்றுவோர் போற்றட்டும் ...

                                                            
சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையதத்தில் தமிழ்நாடு பொது சுகாதார துறை

ஆழ்ந்த தியானம்போல்...

                                                                  
 சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் மாணவர்களுக்கு

வியாழன், 12 ஜனவரி, 2012

சனி, 7 ஜனவரி, 2012

அம்மாவுக்கு செருப்படி,ஆங்கில நாளிதழ்கள்எரிப்பு



   நக்கீரன் வார இதழில் வந்த செய்தியைக்கண்டித்து இன்று ஜனவரி 2012  ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி
எழுந்து அந்த இதழை எரிக்கும் செயல்களை மிக தீவிரமாக மேற்கொண்டனர்.

 எழுந்த   தீவிரத்தில் சில இடங்களில் அம்மாவுக்கு செருப்படிகளை தந்ததுடன், எந்த இதழில்  செய்தி வந்ததோ அந்த இதழுடன் சில ஆங்கில நாளிதழ்களையும் தீ வைத்து எரிக்கப்பட்ட

nakeeran war-1

பக்கங்கள்