வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஆர்ப்பாட்டம்...

                                                       


 கோரிக்கைகளை வலியுறுத்தி கொடுமுடி பகுதி

கிராம நிர்வாக அலுவலகங்கள்  முன்பு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள்
 சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  சீர்குலைக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள்
 நலவாரியத்தை சீரமைக்கவும், முடக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை, பறிக்கப்பட்ட
தொழிலாளர் உரிமைகளை மீண்டும் வழங்கக் கோரியும் மற்றும் ஈஎஸ்ஐ திட்டத்தை
செயல்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.




                                                              


   கொடுமுடி, வடக்குப்புதுப்பாளையம், சாலைப்புதூர் மற்றும் சிவகிரி
உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
ஒன்றிய தலைவர் ஆ.ராஜசுப்ரமணியன், ஒன்றிய துணைச் செயலர் கே.ராஜூ, சிபிஐ
மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், சிவகிரி நகரச் செயலாளர்
மு.வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்