வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 27 ஆகஸ்ட், 2011

விடுதலைப்புலிகளின் விமானங்கள் திணறும் இலங்கை புலனாய்வு துறை.

                                                                       
                           விடுதலைப்புலிகளின் விமானங்கள்

                           திணறும்  இலங்கை புலனாய்வு துறை.

 தமிழீழ விடுதலைப்புலிகளிடம் மொத்தம் 4 விமானங்கள் இருந்ததாகவும், அதில் ஒன்று கிளைடர் விமானம் என்றும்

 அறியப்படுகிறது.

இறுதி யுத்தத்தின்போது கொழும்புநோக்கி இரண்டு விமானங்கள் சென்றபோது அவை அழிந்ததாகவும், கூறப்படுகிறது.

 இந்த நிலையில் புலிகளிடம் இருந்த மற்ற இரு விமானங்களைத்தேடும் பணியை

இலங்கையின் புலனாய்வு பிரிவு முடுக்கி விட்டிருந்தது.

 இது வரை அந்த இரண்டு விமானங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் வான் பரப்பில் பத்து அமெரிக்க போர்விமானங்கள் பறந்ததாகவும்

 அவை இலங்கையின் அனுமதியின்றி பறந்ததாகவும், பசிபிக் பெருங்கடலில் நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த  அமெரிக்காவின் போர்கப்பலில் இருந்து புறப்பட்ட அந்த விமானங்கள்

 இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறி பறந்தன  என்று இலங்கை அரசால் கூறப்பட்டு வந்ததது.

  இலங்கையின் சிவில் விமானத்துறையின் ரேடார் பார்வையில் அமெரிக்க விமானங்கள் பறந்தது தெரிந்ததாக

 இலங்கை விமானப்படை உறுதி செய்திருந்தது.

இது குறித்த மறுப்பை அமெரிக்க தரப்பு கூறியபோது

 இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் 200 கடல் மைல்

தொலைவு வரை கண்காணிக்ககூடியவை அந்த எல்லை வரை நாங்கள் கண்காணிப்போம் என்று இலங்கையின்

 விமானப்படை செய்தியாளர் தரப்பில்   பதில் தரப்பட்டது.

  அமெரிக்காவுக்கு இது குறித்த எரிச்சல் ஏற்பட்ட நிலையில் இலங்கை மந்திரி பேசும் போது இலங்கையின்

  கடல் எல்லை12 மைல் தொலைவு வரையே  உள்ளது.

அமெரிக்கவிமானங்கள் அந்த எல்லைக்குள் அப்பால் தான் பறந்ததாக கூறினார்.

         சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட ரேடார்கள் தற்போது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின் றன.


 இவை இரண்டுமே குறுகிய  மற்றும் தாழ்வான  தொலைவு வரை மட்டுமே

 கண்காணிக்கும் திறன் பெற்றவை.

இந்த நிலையில் தாங்கள் எங்கு பறக்கிறோம், என்பது உள்ளிட்ட தகவல்களை அறியத்தருகிற

அதிநவீன வசதிபடைத்த அமெரிக்கபோர்விமானங்கள்

ரேடார்களின் கண்னுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் சக்தி படைத்தவை அவை இலங்கையின்

ரேடார் பார்வைக்குள் சிக்க முடியாது என்ற கருத்தும் உள்ளது.


  எது எப்படி இருந்தபோதிலும் பசிபிக் கடல் பிராந்தியத்தில்    இருந்து இந்து மகாசமுத்திரத்தை நோக்கி
அமெரிக்கபோர்கப்பல் நகர்ந்தபோது அமெரிக்கவிமானங்கள் பறந்ததாக சொல்லப்பட்ட இந்த நிகழ்வுகளில் ஒரு வித அசைவு தெரிவதாக அறியப்படுகிறது.

      தற்போது இலங்கை தனது கடல் படையையும், விமானப்படையையும் பலப்படுத்திவருவது,...

இலங்கை இறுதி யுத்தத்தின்போது நடந்துகொண்ட முறையையும், தற்போது நடந்துவரும் நிலையையும்

பார்க்கும்போது அது ஏதோ ஒரு வித பீதியில் உறைந்திருப்பதை அறிய முடிகிறது.

வலுவான லோக்பால்... தீர்மானம் நிறைவேற்றம்.

                                                                         


                                வலுவான லோக்பால்... தீர்மானம்   நிறைவேற்றம்.

           அன்னாஹசாரே கொண்டுவந்த வலுவானலோக்பால் கோரிக்கை குறித்த போராட்டத்துக்கு நிறைவு

  தரும் விதமாக மக்களவையில் தீர்மானம்   நிறைவேறியது.
 
  நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிரணாப்முகர்ஜி  லோக்பால் குறித்த தீர்மானம் கொண்டு வந்தார்.

  ஹசாரேயின் முக்கிய தீர்மானங்கள் குறித்து  பரிசீலிக்கவேண்டும் என நிலைக்குழு வலியுறுத்தியது.

     மக்களவையில் தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடந்தபோது உறுப்பினர்கள் குரல் வாக்கெடுப்பின்

 மூலம் தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை  சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

   அவையில் நடந்த தீர்மானம் குறித்த விளக்கத்தினை மராட்டிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு

  அதனை அந்த மாநிலத்தை சேர்ந்த அமைச்சர்  விலாஷ்ராவ் தேஷ்முக் கொண்டு சேர்க்கிறார்.

   அவையில் தீர்மானம் நிறைவேறியது குறித்து அறிந்த ஹசாரே குழுவினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

       இதற்கிடையே பா.ஜ கட்சி  அன்னாஹசாரேவின் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள கேட்டுள்ளது.

        ஞாயிற்றுக்கிழமையுடன் அவரது போராட்டம் முடிவுக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழுக்கு மரியாதை தந்த தைவான்....

                                                                             
                                                 தமிழுக்கு மரியாதை தந்த தைவான்....


தைவான் நாட்டைச்சேர்ந்த கிறிஸ்யோ என்ற சிற்பியால் த மூன்றரை டன் எடை கொண்ட

அமைதியின் சின்னமான மணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மணியில்

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான மணியாக உருவாக்கப்பட்ட இதனை தைவான் அரசு தனது  மற்றும் சீனா ஆகிய  இரு

  நாட்டின் எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் பொருத்தியுள்ளனர்.
 

 சீனாவின் ஆதிக்கத்தில் இருக்க விரும்பால் தன்னை தனிசுதந்திர நாடாக அறிவித்துக்கொண்ட

 தைவானை அழிக்கும் நோக்குடன் கடந்த 58 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தில் சீனபடைகள்

 தைவானின் மீது ஏவுகணைகளை வீசின.

  தொடர்ந்து 44 நாட்கள் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள், எண்ணிக்கையில் 5 லட்சமாக இருந்தன.

   இந்த ஏவுகணைகளிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த அமைதிக்கான

   மணி என்பது குறிப்பிடத்தக்கது.

     கடந்த 49 ம் ஆண்டில் இருந்து சுதந்திர நாடாக செயல்பட்டுவரும் தைவானுக்கு  விடுதலைப்புலிகளுக்கும்,

 இலங்கை அரசுக்கும் சமாதானம் செய்விக்க வந்த நார்வே நாடு

சமாதானத்துக்கான பரிசை தர சீனாவைச்சேர்ந்த மனிதஉரிமையாளருக்கு தரவந்தது. சீன அரசு அவர்

மீது நடவடிக்கை எடுக்க முயன்றபோது அவருக்கு தைவான்  அடைக்கலம் தந்தது.

  சமாதானப்பரிசை தரவந்த நார்வே நாட்டின் மீது கோபம் கொண்ட சீனா அந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.

நார்வே நடத்திவந்த இலங்கை சமாதானபேச்சை குலைக்கும் நோக்கத்துடன் இலங்கைக்கு

 பல லட்சக்கணக்கான ஏவுகணைகளை வழங்கியது.

அந்த ஏவுகணைகள் தான் தமிழர்கள் மீது வீசப்பட்டு தமிழர்களை கொன்று குவித்தது.

   இதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது தைவான் அரசு சீனாவின் ஏவுகணைகளை பயன்படுத்தி தயாரித்த

மணியில் அமைதி  என்ற சொல்லை பொறித்து சீனாவின் எல்லைப்பகுதியில் உள்ள கியான்மென்தீவில் நிறுத்தி உள்ளது.

இந்த தீவானது கடந்த 100 ஆண்டுகளாக ராணுவ மையமாக செயற்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் அரவணைப்பில் உள்ள இந்த தீவில் தற்போது பத்தாயிரம் வீரர்கள் பாதுகாப்பில் உள்ளனர்.

அந்த பத்தாயிரம் பேர் பாதுகாப்பில் தற்போது தமிழ் மணி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழக முதல்வருக்கு இலங்கை அழைப்பு


                                                                                        

                                     தமிழக முதல்வருக்கு இலங்கை அழைப்பு
               
                                                                                            
                          தமிழக முதல்வர்  ஜெயலலிதா மற்றும் லோக்சபாவின்  எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ்

               ஆகியோரை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

                 என்ற தகவலை  மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.                             

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு...

                                                            
                                                                    

                    அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தீக்குளிப்பு

                                             
லோக்பால் மசோதாவை அமல்படுத்தக்கோரி சமூக சேவகர் அன்னாஹசாரே

டெல்லி ராம்லீலா  மைதானத்தில் நடத்திவரும் 10 நாட்களை தொட்ட

நிலையில்...

அவரது ஆதரவாளர் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

            டெல்லி ராஜ்காட்டில் உடல் முழுவதும் தீக்காயம் பட்ட நிலையில்

வாலிபர் ஒருவர்கிடந்துள்ளார். அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில்

சேர்த்தனர்.சிகிச்சை பயனின்றி   அவர் இறந்தார். 

முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் தினேஷ்குமார்

யாதவ்என்பதும் பீகாரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் அன்னாஹசாரேவின் அனல் வீசிக்கொண்டிருக்கும்

நிலையில் தமிழகத்தில்தற்போது பிரளயமே நடப்பதுபோல் காட்சிகள்

அரங்கேறி வருகின்றன. ஒன்று அன்னாஹசாரேவுக்கானஆதரவுப்போராட்டம்,

மற்றொன்று ராஜிவ்கொலை வழக்கில் தூக்கு தண்டணைநிறைவேற்றத்துக்காக

தயாராகிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்ககோரி

நடந்துவரும் போராட்டம்.

நேற்று இவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம்

நடத்தினர்.

சட்டக்கல்லூரிமாணவர்கள் ரயில் பாதையில் தலை வைத்து போராட்டம்

நடத்தினர்.

அடுத்து வேலூர் மாவட்டம்

ஜோலார்பேட்டையில் நூற்றுக்கணக்கான மக்கள் சேர்ந்து உண்ணாவிரதம்

இருந்தனர்.

 தூக்கு தண்டணை விதிக்கப்பட்டவர்களின் விஷயத்தில் தமிழக முதல்வர்

என்ன செய்யப்போகிறார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் தமிழகம்

மட்டும் அல்லாது  உலக நாடுகளும் உள்ளன.

மகன் உயிர் விடும் முன்பே மாய்வோம்...


                                                                     


                               மகன் உயிர் விடும் முன்பே மாய்வோம்...
                                                      தந்தை குமுறல்....


எனது மகன் உயிர்விடும் முன்பே வேலூர் சிறை முன்பு  தற்கொலை செய்துகொள்வோம்

என்று தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை பேசினார்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவரையும் தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி

 வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில்

பெருந்திரளானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அந்த உண்ணாவிரதத்தில் தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: எனது மகன்
பேரறிவாளன் உயிர் விடுவதற்கு முன்பே வேலூர் சிறை வாசலில் நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம்.

எனது மகனின் உயிரை தமிழக முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றவேண்டும்.

செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 ஆண்டுகள் சிறையில் இருக்கிறான். அப்பாவியான

அவன் உயிரை பறிக்க நினைக்கிறார்கள். அவனது உயிர் போகும் முன்பே நாங்கள் குடும்பத்துடன் உயிரை விடுவோம் என்றார்.

இதற்கிடையே வேலூர் சிறையில் தமிழக காவல்துறையின் சிறப்பு போலிசார் கொண்ட படை

குவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் உன்னிப்பான பார்வையில் தற்போது வேலூர் சிறைச்சாலை உள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக வாதிடுகிறார். ராம்ஜெத்மலானி.

                                                                            
                                    பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக
                                                 ராம்ஜெத்மலானி.                                           

                                  
 ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன்
ஆகியோருக்கு அடுத்த மாதம் தூக்கு உறுதி என்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வழக்காட வருகிறார்
பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி. வருகிற திங்கள் கிழமை  ஆகஸ்ட் 29 ம்தேதி சென்னை <<உயர்நீதி
மன்றத்தில் தண்டணையை நிறுத்தி வைக்ககோரி  தண்டணை விதிக்கப்பட்டவர்களின் சார்பில் வாதிட
உள்ளார்.

தங்கத்தை காலி செய்து தலைமறைவான அதிபர்..

                                                  
                                தங்கத்தை காலி செய்து தலைமறைவான அதிபர்...

லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக நீடித்தவர் கடாபி. இவரை பதவி விலககோரி அந்நாட்டு

கிளர்ச்சியாளர்கள் 7 மாதங்களாக போராடி வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்தை நேட்டோ நாடுகள் அங்கீகரித்ததுடன் தங்களது நாட்டு

போர்விமானத்தாக்குதல்களையும் செய்து உதவி வருகின்றனர்.

 இந்த நிலையில் லிபியாவின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றிய

 கிளர்ச்சி படை தலைநகர் திரிபோலியையும் கைப்பற்றியது.

   தலைநகர் கிளர்ச்சியாளர்கள் வசமானதை அடுத்து அதிபர் கடாபி தலைமறைவானார்.

அவரை தேடும் பணியில் கிளர்ச்சி படை, தலைநகரை சல்லடைபோட்டு சலித்துவருகிறது.

அதிபர் வசித்த மாளிகைக்குள் புகுந்த கிளர்ச்சி படையினர் ...

அமெரிக்க வெளியுறவு முன்னாள் அமைச்சர் கண்டலீசா ரைஸ் மீது  அதிபர் கடாபி ஒரு தலைக்காதல்

கொண்டு ரைஸ்ஸின் படங்களை ஆல்பமாக சேகரித்திருந்ததை கண்டு அதிசயத்தனர்.


   இந்த நிலையில் லிபியாவின் ரிசர்வ் வங்கி கவர்னர் பங்தரா அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

லிபியாவின் வசம் தற்போது தங்கத்தின் கையிருப்பு 8 லட்சம் கோடி உள்ளது.

தலைநகர் திரிபோலியில் இருந்த 45 ஆயிரம் கோடி மதிப்பிலான

 தங்கத்தை தலைமறைவான அதிபர் கடாபி துடைத்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிநவீன ஆயுதங்களை பெறுகிறது இந்தியா....

                                                                    
                                                                  
                 

           அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களை பெறுகிறது இந்தியா....

      
ரூ27 ஆயிரம் கோடிக்கான போர்கருவிகளை அமெரிக்காவிடமிருந்து  இந்தியா பெறுகிறது.

 அதிநவீன நான்கு என்ஜின்கள் பொருத்தப்பட்ட  சி.130 போர்விமானங்களும் அடக்கம்.                                      


இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ராபர் கூறியதாவது:
                                  

இதுவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ராணுவ ரீதியான போர்தளவாடங்கள் அளிப்பது

குறித்த பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது ரூ27 ஆயிரம்

கோடி மதிப்பிலான தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு

 அமெரிக்க ராணுவ தலைமையகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

  அமெரிக்க படையில் சேர்க்கப்பட்ட விமானங்களை பிற நாடுகளுக்கு


 குறுகிய காலத்துக்குள் விற்க அமெரிக்கமுன் வந்ததில்லை.

 முதல் முறையாகஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க

விமானப்படையில் சேர்க்கப்பட்ட சி.130 என்ற அதிநவீன

போர்விமானங்களை இந்தியாவுக்கு தருகிறோம்.

 இதனால் இந்தியா ராணுவத்தில் முன்னேறிய நாடாக முடியும்.

 தவிர இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் அமெரிக்காவில் பயிற்சியும் பெறமுடியும்.
                                         

 எம்.777 என்ற ரக பீரங்கிகளையும் அமெரிக்க தலைமையகம் இந்தியாவுக்கு விற்க இருக்கிறது.



சமச்சீர் கல்வி ... தமிழக அரசின் திட்டங்கள்...

                                                       


 
                              சமச்சீர் கல்வி ... தமிழக அரசின்  திட்டங்கள்

 உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க  சில திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக

முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

அவரது அறிவிப்பின் துளிகள்:-

  65 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 710 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்

தரம் உயர்த்தப்படும்.

9735பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டில் நிரப்பப்படும்.

 பள்ளிகளில் தொழிற்கல்வி, உடற்கல்வி உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 16549 பகுதி நேர ஆசிரியர் பணி இடங்கள்
நிரப்பப்படும்.

இதனால் 6,7,8 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

  பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் என சீரமைப்பு மேற்கொள்வதற்கு, ரூ.1082.71 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் 3187 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எல்லா மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் ஒரே மாதிரியாக அளிக்கப்படுவது போல் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக புத்தகப் பைகள்
கொடுக்கப்படவுள்ளன.

கணக்கு உபகரண(ஜியாமெண்ட்ரி பாக்ஸ்), வண்ண பென்சில்கள், புவியியல் வரைபடம் ஆகியவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும்.

 ஆசிரியர் அல்லாத பணியிடங்களாக, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட 5000 பணியிடங்கள் புதிதாக நிரப்பப்படும் ,

ஒரே வருடத்தில் புத்தகத்தை மூன்று பருவங்களுக்கு மூன்று தொகுப்பாகப் பிரித்து முப்பருவ முறை கொண்டுவரப்படும் , இதன்மூலம் பள்ளிக் குழந்தைகள்
புத்தகச் சுமையைக் குறைக்க முடியும், எளிதாகக் கையாள இயலும்.

பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் பட்டியல் இனி மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்டு,

தொழில்நுட்பம் சார் ரகசியக் குறியீடு இருக்கும் வகையில் வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் சிந்தனைத் திறனை

 ஊக்குவிக்க 7 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்களுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் உயர்நிலை, நடுநிலை, மேல்நிலைப்பள்ளி வகுப்பு கற்றல் கற்பித்தலை

 மேம்படுத்த தகவல் தொழில்நுட்ப திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது பள்ளி ஆசிரியர்களுக்கான திட்டமாக செயல்படுத்தப்படும்.

இதன்மூலம் ஆசிரியர்களுக்கான தனிப் பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் தரமான கணணி மூலமான நவீனக் கல்வி கிடைக்க செயற்கைக் கோள் மூலம்

 பாடங்களைப் பார்க்க வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழக ஆளுனராகிறார் ரோசையா...

  

                                                    
                                       தமிழக ஆளுனராகிறார் ரோசையா...

தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு.

தற்போதைய தமிழக கவர்னர் பர்னாலாவின் பதவிக்காலம் சென்ற ஜீலை மாதத்துடன் முடிவடைந்தது.

இவருக்கு பதிலாக புதிய கவர்னரை நியமிக்கும் யோசனையில் இருந்த மத்திய அரசு ஆலோனையில்,

 ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசையா தமிழகத்தின் புதிய கவர்னர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.

அதனை ஏற்ற மத்திய அரசு ரோசையாவை தமிழக கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநில காங்கிரஸின் மூத்ததலைவரான ரோசையாவுக்கு 79 வயதாகிறது.கடந்த 79 ம் ஆண்டு முதல்

ஆந்திர சட்சபையில் ஐந்து காங்கிரஸ் முதல்வர்களின் தலைமையில் மந்திரியாக இருந்துள்ளார்.

கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணி ஆற்றியுள்ளார். ராஜசேகர ரெட்டியின் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த

 இவர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் ஆந்திர முதல்வர் ஆனால், தொடர்ந்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளால்

முதல்வர் பதவியை துறந்தார். கடந்த 98ம் ஆண்டில் எம்.பி ஆகவும் இருந்துள்ளார்.

 தற்போது எம்.எல்.ஏ,வாக இருந்து வரும் ரோசையா அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு

 தமிழக கவர்னராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதியின் பெயரால் கொலை

நீதியின் பெயரால் 

கொலை செய்வது 

             தீர்வாகுமா?

மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?


மரணக் குழிக்குள் தள்ளும் கையெழுத்துக்கு, கருணை மனு என்று பெயர் வைத்தது யார்?

ராஜீவ் கொலை மட்டும் அல்ல… எல்லாக் கொலைகளும் கண்டிக்கத்தக்கவை, பயங்கரமானவை, ஆதரிக்க முடியாதவை!

ஆனால், அநியாயத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலைக்குத் தண்டனையாக, நீதியின் பெயரால் கொலை செய்வது தீர்வாகுமா? கொலை செய்தவனைக் கொலை செய்வதுதான் தீர்வா? கண்ணுக்குக் கண்… பல்லுக்குப் பல்… என்று சொல்லக்கூடிய காட்டுமிராண்டிக் காலம் இருந்தது என்றால், இப்போது நடப்பதற்கு என்ன பெயர்?

மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் கேள்வி இதுதான்!

இந்தக் கேள்விக்கு இறுதி விடை சொல்லாமலேயே, பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூன்று உயிர்களைத் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்டார்.

பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள். ஆனால், புலிகளையோ, பிரபாகரனையோ தெரியாத மகாத்மா காந்தி சொன்னதையாவது கேட்க வேண்டாமா? ‘குற்றவாளிக்கு உரிய மன நோய் மருத்துவமனைதான் சிறைச்சாலை. அது கொலைக் களம் அல்ல’ என்றவர், ‘உயிர் இறைவனால் அளிக்கப்பட்டது. அதனைப் பறிக்க, அவனைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை’ என்றார்.

காந்தி சொன்ன எதையுமே கேட்கவில்லை காங்கிரஸ். இதை மட்டுமாவது கேட்கக் கூடாதா?

1991 மே 21 – ஸ்ரீபெரும்புதூர் பனங்காட்டுக்குள் பழி தீர்க்கப்பட்டார் ராஜீவ். அந்த வழக்கில் 41 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு, பெண்கள் படைத் தலைவர் அகிலா ஆகிய மூவரும் பிடிக்க முடியாத குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.

மனித வெடிகுண்டாக வந்த தணு, பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் மற்றும் சுபா, மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய கோடியக்கரை சண்முகம் உள்ளிட்ட 12 பேர் மரணம் அடைந்தனர்.

மீதம் உள்ள 26 பேர் மீது வழக்கு விசாரணை பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் நடந்தது. 1998 ஜனவரி 28-ம் நாள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நவநீதன் தீர்ப்பு அளித்தார்.

மரண தண்டனை ஒழிப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக் கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. ஆயுள் தண்டனை என்றால், இதுவரை நடந்த குற்றங்களுக்கு எல்லாம் 14 ஆண்டுகளில் விடுதலை செய்ய… இந்த வழக்கில் கைதானவர்கள் மட்டும் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள்.

‘ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முழுக்க உள்ளேயே இருக்க வேண்டும்’ என்று வியாக்யானம் சொல்லப்படுகிறது. இதே தமிழ்நாட்டில்தான்
ஏழு ஆண்டு களுக்குள் வெளியே வந்த ஆயுள் தண்ட னைக் கைதிகளும் உண்டு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – என்பதுதான் எல்லாச் சட்டத்துக்கும் முதல் விதி… மீறப்படும் முதல் விதியும் இதுதான்.

செத்துப்போனது ராஜீவ் காந்தியா, ராஜா ராமா என்று சட்டம் பார்க்கக் கூடாது. 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கள், ‘இது பயங்கரவாத வழக்கு அல்ல. எனவே, தடா சட்டம் இந்த வழக்குக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

”இந்திய அரசைத் திகைக்கச்செய்வதோ, இந்திய மக்களுக்கு அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க போதிய ஆதாரம் இல்லை.

தடா சட்டத்தின் பிரிவுகளுக்கான குற்றங்களுக்கு எங்களுக்கு முட்டுக் கொடுக்க முடியவில்லை” என்று நீதிபதிகள் சொன்னார்கள்.

பழ.நெடுமாறன், மேல் முறையீடு செய்யாமல் போயிருந்தால், இன்று 26 பேரும் தூக்கு மேடையில் நின்றிருப்பார்கள்.

மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் வாதத் திறமையால், 22 பேருடைய உயிர்கள் தப்பின. இப்போது நான்கு உயிர்கள் துடிக்கின்றன!

பேரறிவாளனின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று இங்கு இருப்பவர்களுக்கு இணையாகக் குரல் கொடுப்பவர் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர்.

இவர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. நல்லவேளை, தமிழரும் அல்ல. இந்திய நீதிமன்றங்களும் நீதிபதிகளும் ‘வாழும் நீதி தேவதை’யாக எவரை நினைக்கிறார்களோ, அவரே சொல்கிறார்…

”இந்தியன் என்ற முறையில், உலகக் குடிமகன் என்ற முறையில், நீதிபதி என்ற முறையில் மரண தண்டனையை ஒழிக்கப் போராடுகின்றவன் என்ற முறையில், இதுவே என் நெடுநாளைய விருப்பம்.

நான் ஒரு கொள்கை வெறியன். உயிருக்கு ஆதரவும் சாவுக்கு எதிர்ப் பும் காட்டுகிற கொள்கை வெறியன். தூக்குத் தண்டனையைத் தூக்கில் இடுங்கள். இதுவே என் உறுதியான நிலைப்பாடு!” என்றார் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.


சட்டங்கள் மனிதனைத் திருத்துவதாக அமைய வேண்டும் என்ற அவர், தன்னு டைய எண்ணத்துக்கு ‘வால்மீகி நடவ டிக்கை’ என்றும் பெயரிட்டார்.


”ஒரு காலத்தில் கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகி, உலகின் மாபெரும் இதிகாசப் புலவர் ஆக முடியும் என்றால், எந்தக் குற்றத்துக்காகவும் ஒரு மனிதனின் உயிரை ஏன் பறித்துத் தண்டனை தர வேண்டும்?” என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் கேட்டார்.

மேலும், தூக்கு மேடையில் நின்றுகொண்டு இருக்கும் பேரறிவாளன் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம், சந்தேகத்துக்கு இடமற்ற முறையில்மெய்ப் பிக்கப்படவும் இல்லை.

‘சிவராசன், சுபா, தணு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும்’ என்ற தனியார் ரேடியோ ஸ்டேஷன் உரையாடலை (எக்ஸ்.பி.392) சி.பி.ஐ. தனது ஆதாரங்களில் ஒன்றாகக் காட்டி, அதையே நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.

அது உண்மையானால், இன்றைக்கு தூக்கு மேடையில் நிறுத்தப்படும் நான்கு பேரும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நான்கு பேரும் சதி தெரியாமலேயே அந்தச் சுழலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்றுதானே சொல்ல முடியும்?

பேரறிவாளனின் விடுதலைக்குப் போராடுபவர்கள் இதையே தங்கள் தரப்பு வாதமாக வைக்கிறார்கள்.


1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா எழுதிய கடிதத்தில்,

‘என் அன்புக் கணவரின் கொடூரமான கொலைக்குக் காரணமாக இருந்த நான்கு

பேரும் தூக்குத் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று, எங்கள் குடும்பம்

நினைக்கவில்லை. எனக்கோ, என் மகனுக்கோ, என் மகளுக்கோ,

கொலையாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை.

கொலையாளிகள் தங்களுக்குக் கருணை மனு அனுப்பும்போது, தாங்கள்

அவர்களை மன்னித்து தூக்குத் தண்டனையை நிறுத்தும் படி பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

‘இதே நிலைப்பாட்டில்தான் நான் இன்றும் இருக்கிறேன்’ என்பதை சோனியா

உறுதிப்படுத்துவதில்தான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின்

உயிர்களும் அடங்கியிருக்கிறது.

120-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் எனும் உலகச் சட்டம் ‘கொல்லாமை’பற்றி நிறையவே சொல்கிறது.
வள்ளுவர், காந்தி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் மூவரில் யார் பேச்சைக் கேட்டாலும் மூவர் தலை தப்பும். தப்புமா?

- ஆனந்த விகடன் -

மர்மங்கள்.....

                                                     


                                                     மர்மங்கள்.....
 
     இந்தியாவில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் தமிழீழத்துக்கு எதிரானதா? என்ற கேள்வியுடன் வந்த கட்டுரை ஒன்று மிகுந்த பரபரப்புடன் பேசப்படுகிறது. அதன் முழுவடிவம்:

    
   இந்தியாவின் மர்மமான நிகழ்வுகளில் தமிழீழத்தின் விடியலுக்கு எதிரானசதிகளா அல்லது சிங்களனுக்கு எதிரான தொடக்கமா…..
கடந்த சில நாட்களாக இங்கு இந்தியாவில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை உற்று
நோக்கும் போது,சில மர்மங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது

1 )இந்தியாவில் மிக முக்கிய அரசியல் பிரச்சனை நடக்கும்போது அறுவை
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளாராம் சோனியா.இத்தனைக்கும்
உலகத்தரத்தில் இந்தியாவில்
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்தியாவுக்கு
வருகிறார்கள் .

2 ) நாடே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை பற்றி
ஒரு அறிக்கை கூட வெளிடாத மர்மம்.

3 ) இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெறவிருந்த
சிறிலங்காவின் போர்க்குற்றங்களின் மீதான விவாதமானது,சிறிலங்காவில்
போருக்குப்பின்னால் இந்தியா செய்த உதவிகள் தொடர்பாக என்று
மாற்றப்பட்டதும் ஒரு மர்மம்.

4 ) சோனியா அறுவை சிகிச்சைக்கு என்று அமேரிக்கா சென்றவுடன் இங்கிலாந்து
நாடு ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளின் தடை நீக்கத்திற்கான
வழக்கில் புலிகளுக்கு எதிராக ஆஜராகியதுஒரு மர்மம்,

திறந்த இருதய அறுவை
சிகிச்சைக்கு கூட பத்துநாட்களில் வெளியே வரும் இந்த காலத்தில் ஒருமாத
காலம் தொட்டு அமெரிக்காவில் சிகிச்சை…நம்மை மடையர்களாக
ஆக்குகிறார்களோ என்ற மர்மம் எழுகிறது,ஏனென்றால் கடந்த பதினோரு ஆண்டுகளாக
கண்டுகொள்ளப்படாத பேரறிவாளன், சாந்தன்,முருகனின் கருணை மனு சோனியாஅமெரிக்கா சென்ற சமயத்தில் தானா நிராகரிக்கப்பட வேண்டும்,

…இங்கே
மூவருக்கு கருணைமனு
நிராகரிக்கப்படுகிறது அமெரிக்காவின் விமானங்கள் சிறிலங்காவின் வான்
பரப்பில் ஒத்திகைக்கு வருகிறது.

மர்மத்தின் உச்சக்கட்டமாக இந்தியாவின்
வெளியுறவுத்துறை ஆலோசகர் எம்கே நாராயணன் நேற்று தமிழீழ தமிழர்களின்
பிரச்சனையில் சிங்களனுக்கு ஆலோசனையும் சிங்கள அரசு தமிழர்களுக்கு எதுவும்
செய்யவிரும்பாது என்ற உண்மையையும் சொல்கிறார். இது மிகப்பெரிய மர்மம்…

5 ) உலகத்தின் மிக பெரிய மூன்றாவது கடற்படையும்,கடலோர படை என்ற
ஒன்றும் வலிமையாக இருந்தும் வேதாரண்யத்தில் இருந்து வேம்பார்வரைக்குமான
200 கிலோமீட்டர் கடல் எல்லைக்கு 100 படகுகளில் வெறும் 200 ஆளணிகளை கொண்டு
பாதுகாப்பு அளிக்காத மர்மம் என்ன என்றும் தெரியவில்லை.

6 ) செப்டம்பர் மாதம் கூடுகின்ற மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா என்ன
மாதிரி செயல்படபோகிறது என்ற மர்மமும் இருக்கிறது,

ஆனால் ஒன்றுமட்டும்
புரிகிறது இத்தனை மர்மத்திற்கும் ஒரு மெல்லிய தொடர்பு இருக்கிறது,

அது
இந்தியாவுக்கு இன்னும் மனசாட்சி உறுத்தவில்லை இந்தியாவின் தேசியத்தை
காங்கிரசுக்காரன் அழித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை இன்னும் இங்கே
யாரும் புரிந்துகொள்ளவில்லை,

இந்தியாவின் தமிழர் விரோத செயல்ப்பாடுகளில்
தேக்கநிலையினை பாதிக்கப்பட்ட,மற்றும் புலம்பெயர் தமிழீழமக்கள் சிறப்பாக
செய்துவிட்டார்கள்.

எதிர்வரும் செப்டம்பர் அமர்வில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில்
அமெரிக்காவும் ஜெர்மனியும் சிறிலங்காவின் போற்குற்றங்களுக்கு எதிரான
சர்வதேச நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்மானம் கொண்டுவரும் என்ற
எதிர்பார்ப்பு நிலவி வரும் நேரத்தில்,ராஜபக்சே சீனா செல்கிறான்,

சோனியா
அமெரிக்காவில் சிகிச்சை என்ற பெயரில்
சதிவலை பின்னுகிறார்,சதிவலைக்கு வலு சேர்க்க,சாந்தன்,பேரறிவாளன்,முருகன்
மீதான கருணை மனு நிராகரிப்பு,செய்தியாகிறது ,

சர்வதேசம் மீண்டும் ஒருமுறைராஜீவை உச்சரிக்கிறது,எப்போதும் போல தமிழ்நாட்டு சட்டப்பேரவையின்
தீர்மானம் கழிவரைக்காகிதமாகிப்போனாலும், தீர்மானம் நிறைவேற்றியவுடன்
சென்னை
வந்து முதலமைச்சர் ஜெயலிதாவை பார்த்துவிட்டு கொழும்பு சென்ற சிவசங்கரமேணனும் கொழும்பு சென்றுவிட்டு வந்தது தொடர்பாக எந்த ஒரு
விஷயத்தையும் வெளியில் சொல்லவில்லை

.கொலைகாரன் ராஜபக்சேவை மூக்கறுத்து
திருப்பி அனுப்ப முழு ஒத்துழைப்பு அளித்த இங்கிலாந்து நாடு,

இன்று
விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்திற்கு எதிராக களம்
இறங்குகிறது.

இத்தனைக்கும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தெரியும்

புலிகளையும் தமிழீழத்து மக்களையும் பிரிக்க முடியாது என்பது

நன்றாக தெரிந்திருந்தும் இங்கிலாந்து தமிழனுக்கு எதிராக களம் இறங்குகிறது.

      சோனியா அமெரிக்காவில்,இப்போது அமெரிக்கா வான்படை சிறிலங்காவில் ஒத்திகை
பயிற்ச்சியாம்.

இப்போது எம்.கே.நாராயணனுக்கு அரசியல் விவகாரம் பற்றி
பேசவேண்டிய
தேவை வருகிறதாம்…

.ம்... உச்சந்தலையில்  அடித்தாலும்
சரி,சிங்களனுக்கு சேவகம் செய்வதை இந்தியா நிறுத்தாது,

இப்போதும்
இந்தியாவின் செயல்கள் எந்த விதத்திலாவது சிங்களனுக்கு சேவகம் செய்ய
வேண்டும் என்ற துடிப்பு மட்டும் அடங்காமல் இருக்கிறது.

இந்தியாவில் காங்கிரசு என்ற ஒரு கட்சி இருக்கும் வரைக்கும் இந்தியா
திருந்தப்போவதும் இல்லை,அதன் இறையாண்மை நீடிக்கப்போவதும் இல்லை, இங்கே
நாட்டை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை,

உலகத்திலேயே,ஊழலுக்கு எதிராக
சட்டம் இயற்றவேண்டி உண்ணாவிரதம் இருந்து போராடும் இழி நிலையில், ஆட்சி
நடத்தும் ஒரு கட்சியிடம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்க
முடியுமா?…

போராடுகிற ஒரு இனம் அதன் சுதந்திரத்தை அடைந்தே தீரும் ….
போராடுவோம்....
கிடைக்கின்ற தளங்கள் அனைத்தில் இருந்தும் அயராது போராடுவோம்.

நன்றி öருநடன்

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

கருணை மனு நிராகரிப்பு செப்7 ல் தூக்கு.

                                                            

                        பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு  தூக்கு.
                                மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.

 ராஜிவ் மரணத்தில் தொர்டபுடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை செப்டம்பர் 7ம் தேதி தூக்கிலிட உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் <உள்ளனர். தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட இவர்கள் தங்கள்
மீது கருணைகாட்டக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்தக்கருணை மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக்கடிதத்தில் வருகிற செப்டம் மாதம் (அடுத்தமாதம் )7 ம்தேதிக்குள் மூவரையும் தூக்கிலிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மனசாட்சியின் கண்ணீர் குரல் நாங்கள்

                                                
                   மனசாட்சியின்  கண்ணீர்   குரல் நாங்கள்
           பேரறிவாளன் சாந்தன் முருகன் ஜீ.விக்கு தந்த பேட்டி....


கேள்வி:- எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?

பேரறிவாளன்:- முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம்.

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?

பேரறிவாளன்:- அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது.

பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்.

கேள்வி:- தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பேரறிவாளன்:- மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்.
           தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. மனசாட்சியின் கண்ணீர்க் குரலாகச் சொல்கிறேன். எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை.

சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?

பேரறிவாளன்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார். தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன்.

காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிடமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது.

ஆனால், ஏற்கனவே பரப்பிய பழிகள் போதாது என சாத்தானின் படைகள் என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்?.

ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது. தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்.

முருகன்

கேள்வி:- தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

முருகன்:- மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது.

தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன.

எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்.

கேள்வி:- தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?

முருகன்:- எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை.

எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால் ‘நன்றி.

ம.தி.சாந்தன்

கேள்வி:- ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே?

சாந்தன்:- கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான கடவுச்சீட்டுகளுடன் வந்தேன்.

அதை குற்றப் புலனாய்வுத் துறை கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான கடவுச்சீட்டுடன் வருவானா?.

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம் என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தோமஸ் அவர்கள் கூறுகிறார்.

ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம் என்று நீதிபதி தோமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார் என்கிறார்.

நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தோமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ குற்றப் புலனாய்வுத் துறை கூடச் சொல்லவில்லை.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லை.

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார்.

சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.

இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?

என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது.

பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா?. நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா?. இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்.

நன்றி: ஜூனியர் விகடன்

கராட்சியில் கலவரம் 200 பேர் பலி..

                                                                  

                                               கராட்சியில் கலவரம் 200 பேர் பலி


 பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருதரப்புக்கும் எழுந்த மோதலில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
                                                

 இந்த மாதத்துவக்கத்தில் பாகிஸ்தானை தற்போது ஆட்சி செய்துவரும் பாகிஸ்தான் மக்கள்

கட்சி தொண்டர்களுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான

முக்தாஜிதாகுவாமி  தொண்டர்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

 இந்தக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது.
  
கலவரத்தில் இறந்த 19 பேருக்கு அஞ்சலி செலுத்த முக்தாஜிதாகுவாமி கட்சியினர்

 கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தனர். இதனை முன்னிட்டு

வர்த்தக நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை.
இருந்தபோதும் அன்றும் கலவரம் ஏற்பட்டது.

                                        

 இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்துவரும் கலவரத்தில்

 இது வரை இருநூறு பேர் கொல்லப்பட்டிருக்கலாம்


என அஞ்சப்படுகிறது. சம்பவங்கள் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் யூசூப்ரசாகிலானி தெரிவித்துள்ளார்.


பக்கங்கள்