அமெரிக்கா வரவேற்பு...
இலங்கையில் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை
விடுவிக்கவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க
அரசின் பேச்சாளர் மார்க் பேசியதாவது: இலங்கையில் அவசரகால சட்டம்
விலக்கிகொள்ளப்படுவதாக தகவல் வந்துள்ளது.
இது வரவேற்க தக்கது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்
களின் மீது குற்றப்பத்திரிக்கைகளை அரசு தாக்கல் செய்யவேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
பழைய சட்டம் நீக்கப்பட்டு தற்போது புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது
அந்த சட்டங்களை அந்நாட்டு அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதினை
அமெரிக்கா உன்னிப்புடன் கவனித்து வருகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக