கார்குண்டு வெடித்துதொழுகை செய்தவர்கள் பலி..
பாகிஸ்தானில் உள்ள குலிஸ்தானில் ரம்ஜான் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது
வெடித்த கார் குண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ரம்ஜானை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள குலிஸ்தான் பகுதியில் உள்ள
ஒரு இடத்தில் தொழுகை நடந்துகொண்டிருந்தது.
அப்போது அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக