துவக்க விழா...
சிவகிரியில் உள்ள ஆயுள்காப்பீட்டுக்கழக அலுவலகத்தில்
ஆயுள் காப்பீட்டுக்கழகம் துவக்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு விழா நடந்தது.
விழாவுக்கு ஆயுள்காப்பீட்டுக்கழகத்தின் சிவகிரி கிளை மேலாளர் ரபியுதீன்
தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கனரா வங்கி மேலாளர்
சந்திரசேகர், சிவகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயசுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் குத்துவிளக்கினை சிறப்பு விருந்தினர்கள் ஜெயசுதா, சந்திரசேகர்,மற்றும்
அலுவலக பணியாளர் மோகனவடிவேல், வளர்ச்சி அதிகாரி செந்தில்நாயகம்,
முகவர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர்.
முன்னதாக உதவி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் வரவேற்றார்.
பின்னர் மற்றும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
முடிவில் வளர்ச்சி அதிகாரி ஜாகிர்ஹீசைன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக