வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 4 அக்டோபர், 2021

எந்தவொரு தியாகியையும் வைத்து அரசியல் செய்யும் கட்சி கிடையாது.



 ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மறைந்த சுதந்திரபோராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 118வது பிறந்தநாள் விழா நடந்தது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு  சிவகிரியில் உள்ள திருப்பூர் குமரனின் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல தமிழக பாரதியஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு குமரனின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அண்ணாமலை பேசியதாவது:  எங்களை பொறுத்தவரை  ஒருவரை சாதியின்மூலமாக அடையாளப்படுத்தி அதன்மூலமாக வாக்குவருவாயை பார்க்ககூடிய கட்சி பா.ஜ.க கிடையாது.நாங்கள் தேசிய சித்தாந்திற்காக வேலை செய்கிறோம். 
தலைவர்களின் பிறந்தநாளில் ,நினைவுநாட்களில் அவர்களுக்கு மாலை அணிவித்துவித்தபின்னர் அவர்களை மறந்துவிடுகிறோம்.
அவர்களின் தியாகங்களை புரிந்துகொண்டு அதனை இளையசமுதாயத்துக்கு எடுத்து செல்லவேண்டும்.
 தமிழக பா.ஜ.க எந்தவொரு தியாகியையும் வைத்து அரசியல் செய்யும் கட்சி கிடையாது.
ஈரோட்டு மண்ணில் ஏதொவொன்று இருக்கிறது.இந்த மண்ணில் தேசியம் , ஆன்மீகம் கலந்துகிடக்கிறது.
இரண்டுநாட்களுக்கு முன்னர் நான் சென்னையில் உள்ள கர்மவீரர் காமராஜர் ஐயா சமாதிக்கு சென்றிருந்தேன். 
ஒரு பெரு மனிதரின் சமாதியை மோசமாக வைத்திருக்கிறார்கள்.அந்த சமாதி சிதிலமாக உள்ளது. 
ஆச்சர்யம் என்னவென்றால் காமராஜரின் சமாதி்க்கு இதுவரை சோனியாகாந்தியோ, ராகுல்காந்தியோ வந்தது கிடையாது.
ஓட்டுமட்டும்தான் ஒரு தலைவரை வைத்து வாங்கவேண்டும்,ஆனால் அந்த தலைவருக்கு கொடுக்கவேண்டிய கௌரவத்தை கொடுக்க கட்சிகள் இல்லாதபோது பா.ஜக அந்த கௌரவத்தை தரும்.
காமராஜர் ஒரு கட்சியின் சொத்தா? அவர் தமிழர்களின் சொத்து,அதனால்தான் பா.ஜ.க சார்பில் தமிழக முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.
நீங்கள்  மூன்று, நான்கு  மாதங்களில் நிதி ஒதுக்கி காமராஜர் சமாதியை சரிசெய்யவில்லை என்றால் பா.ஜ.க இதனை மக்கள் இயக்கமாக மாற்றி 2022 அக்டோபர் 2 நாங்கள் அவருக்கு மணிமண்டபத்தை கட்டுவோம் என்று சொல்லியிருக்கிறோம்.
எங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியாக ஆட்சியில் அமரவேண்டும் என்றிருக்கிறோம்.இதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம்.
  எங்களுடைய சித்தாந்தத்தையும் கொள்கையையும் இரண்டு கண்களாக வைத்து தேசியத்தையும் ஆன்மீகத்தையும் எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காமல்  ஆட்சியில் அமரவேண்டும் என்றிருக்கிறோம்.
 மற்ற அரசியல் கட்சிகள் செய்த தவறை செய்யக்கூடாது என்றிருக்கிறோம்.
 அதனால் உங்களுக்கு சமுதாய புரட்சி வேண்டும் என்றிருந்தால் நிச்சயமாக ஒரு அரசியல் கட்சிமூலமாகத்தான் அது வேகமாக நடக்கும்.
 ஆகவே பா.ஜ.க தேசப்பணியை செய்வதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார்.

புதன், 8 செப்டம்பர், 2021

ரயில்வர தாமதம்:பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

 கடந்த 2016ல் ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்கு ஒரு குடும்பத்தினர் ரயில்பயணம் மேற்கொள்ளவிருந்தனர். அவர்கள் செல்லவேண்டிய ரயில் வருவதற்கு நான்குமணிே நேரம் தாமதமாகியது.

இதனால் செல்லவேண்டிய இடத்துக்கு வாடகைக்காருக்கு  அதிக வாடகை கொடுத்து  அந்த குடும்பத்தினர் சென்றனர். 

பின்னர் இது  குறித்து அந்த குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். 

தேவையற்ற தாமதம், சேவைக்குறைபாடு என்று தொடரப்பட்ட இந்த வழக்கு  மாவட்டநுகர்வோர் மன்றம்,  மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசியநுகர்வோர் தீர்ப்பாயம், என பல நீதிமன்றங்களுக்கு சென்றது.

அனைத்து நீதிமன்றங்களும் நுகர்வோருக்கு சாதகமாக தீர்ப்பளித்தநிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை மேல்முறையீடு செய்துகொண்டிருந்தது. கடைசியாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கு சென்றது.

விசாரணையின்முடிவில்  நீதிபதிகள் ஏழு பக்கங்களில் தீர்ப்பளித்தனர். 

‘‘போட்டியும் நம்பக்தன்மையும், தேவைப்படும் நாட்கள் இப்போது உள்ள நிலையில், பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவேண்டும். 

பணிக்கலாச்சாரத்தையும், செயல்முறையையும் மேம்படுத்தவேண்டும். 

அதிகாரிகள்  மற்றும் நிர்வாகத்தின் கருணையில் பயணிகள் இருக்கமுடியாது. 

ரயில்தாமதமாக  இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கவில்லை. 

ஜம்முவிற்கு தாமதமாக  ரயில்வந்ததற்கான காரணம் இல்லை.  காரணங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது  ரயில் தாமதமாக வந்ததற்கும் , புறப்பட்டதற்கும் ரயி்ல்வே சரியான காரணங்களை கூறுவது அவசியம். 

குறைந்த பட்சம் ரயில்தாமதாக வந்ததற்கு விளக்கம் அளிக்கவேண்டும் , அதிலும் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.

 பயணிகளுக்கு பயணி்க்கும் நேரம் விலைமதிப்பில்லாதது அடுத்தடுத்த பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். 

இந்த வழக்கில்  ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள். 

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான காரணமும், ஆதாரமும் இல்லாத நிலையில்  தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில் , பயணிக்கு இழப்பீடு வழங்க ரயில்வே கடமைப்பட்டுள்ளது.

 எனவே ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தீர்பளித்தனர்.



ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு.

 தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர், ஆக்ரமிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நீர்நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால் தான் வருங்கால தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும்அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்  என அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு.

 தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



உயர் கல்விக்கு ஊக்கத்தொகை : தமிழக அரசு அரசாணை வெளியீடு.

 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக பயின்ற உயர் கல்விக்கு ஊக்கத்தொகை வழங்க ,தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் நடைமுறையைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. பி.எச்டி அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருந்தால் ரூ.30ஆயிரம்  ஊக்கத்தொகை வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.



குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்.

 குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் ,பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கவும்,  மதசார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



விநாயகர் சதுர்த்தி உத்தரவு.

 விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் எ


ன்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

 தமிழ்நாட்டில் வருகின்ற செப்.18ல் நடைபெறுகிற

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

www.tnpsc.gov.in. 

என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.



வெள்ளி, 3 செப்டம்பர், 2021

தொகுதியின் தேவைகள் என்ன ? சட்டப்பேரவையி்ல் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி பேச்சு.

 தமிழக சட்டபேரவையின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மொடக்குறிச்சி பா.ஜக எம்.எல்.ஏ., டாக்டர் சரஸ்வதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: 

மொடக்குறிச்சி தொகுதியில்  உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தை தாலுக்கா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும். மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியி்ல் உள்ள மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தி தரவே

ண்டும்.

 பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி. அரசு மருத்துவ கல்லூரியில் ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தவேண்டும். 

அம்மா மினிகிளினிக் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் போதை மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கவேண்டும்.

 ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால் அவர்கள் பயன்பெறும் வகையில் ஈரோட்டில் ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க மாநில அரசு முயற்சிமேற்கொள்ளவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதியில் தென்னை மற்றும் அதன் விளைபொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும், 

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியி்ல் விவசாய உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவேண்டும். மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள அனுமன்நதி என அழைக்கப்படும் குரங்கன்பள்ளம் ஓடையினை தூர்வாரி தடுப்பணைகள் அமைக்கவேண்டும். 

கொடுமுடி வட்டத்தில் உள்ள கொடுமுடி முதல் நாமக்கல்மாவட்டத்தில் உள்ள பிலிக்கல் பாளையம் வரை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவேண்டும். 

கொடுமுடி வட்டம் நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் உள்ள சத்திரம் பகுதியில் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் ஈரோடு கரூர் ரயில்வே சாலையை கடந்து செல்ல புதிய சாலை அமைக்கவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடிவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சி பகுதியில் உள்ள காசிபாளையம் ஊர்பொதுமக்கள் மயானத்துக்கு சென்றுவர புகளூரான் வாய்க்கால் வழியாக பாலம் அமைக்கவேண்டும்.

 கொடுமுடி தாலுக்காவில் உள்ள கருவேலம்பாளையம் மற்றும் ஊஞ்சலூர் வெள்ளியம்பாளையம் இடையே கதவனை அமைக்கவேண்டும். 

கொடுமுடி தாலுக்காவில் உள்ள கிளாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட சொக்கநாச்சிஅம்மன்கோயி்லுக்கு செல்லும் வழியில் பழுந்தடைந்த நிலையி்ல் உள்ள மண்பாலத்தை சீரமைக்கவேண்டும். 

கொடுமுடி தாலுக்கா ஊஞ்சலூரில் உள்ள வள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தினை அகலப்படுத்தவேண்டும். 

கொடுமுடி தாலுக்காவில் உள்ள பாசூரில் ரயி்ல்வே பாலம் அமைக்கவேண்டும். கொமுடிவட்டத்தில் உள்ள வெற்றிக்கோனார்பாளையத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கவேண்டும். 

மொடக்குறிச்சி தொகுதியில்  தாலுக்கா விளையாட்டு உள் அரங்கம் அமைக்கவேண்டும்.  பூந்துறை குளத்தினை சுற்றுலாத்தலமாக அமைக்கவேண்டும். 

கொடுமுடியில் பழமைவாய்ந்த மற்றும் மும்மூர்த்தி ஸ்தலமாக விளங்கக்கூடிய மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாள் திருக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மீக சுற்றுலாதலமாக அமைக்கவேண்டும்.  

தமிழக விவசாயிகளுக்கு ஆட்கள் கூலி உயர்ந்துவிட்டதால் விவசாயம் செய்ய சிரமமாக உள்ளது. இதற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வரும் ஆட்களை விவசாய வேலை செய்ய உதவி செய்தால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு பெரும்  உதவியாக இருக்கும். 

மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய விளைபொருட்களான வாழைக்காய் மண்டி மஞ்சள் மண்டி மற்றும் ஒழுங்குமுறை விற்பனைகூடம் அமைக்கவேண்டும்.

 வளந்தான்கோட்டையில் பகுதிநேர கால்நடை மருத்துவமனை உள்ளது. அதற்கு பத்து வருடமாக கட்டிடம் இல்லாமல் தனியார் கட்டிடத்தில் உள்ளது. இதற்கு அரசு கட்டிடம் அமைக்கவேண்டும்.

 சிவகிரி கிராமம் சிலுவம்பாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகம் அமைய புதிய கட்டிடம் அமைக்கவேண்டும் என்று பேசினார்.



சிவகிரி , அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ 36 .56இலட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று எள்  விற்பனைக்கான  ஏலம் நடைபெற்றது.

இதில்  சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 216 மூட்டைகளில் 16 ஆயிரத்து126 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் கருப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ76 . 39 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ101. 99 காசுகள், சராசரி விலையாக ரூ96 .59 காசுகள் , 

சிவப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ75 .19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ124 .11 காசுகள், சராசரி விலையாக ரூ 92 .72 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ15 இலட்சத்து 36 ஆயிரத்து 878 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டது.

இதேபோல

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  நடந்த தேங்காய் பருப்பு விற்பனையில்  22 ஆயிரத்து 72 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு  விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் தர பருப்பு குறைந்தபட்ச விலையாகரூ 99 . 39 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ103 .49 காசுகள், சராசரி விலையாக ரூ103 39 காசுகள்,இரண்டாம் தர பருப்பு  குறைந்தபட்ச விலையாக ரூ75  89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 95 .32 காசுகள், சராசரி விலையாக ரூ91 . 99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ21 இலட்சத்து 19 ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆக சிவகிரி அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் ரூ36லட்சத்து 56 ஆயிரத்து 148க்கு விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.


புதன், 1 செப்டம்பர், 2021

இந்த வருடம் அதிகம்....

 தமிழகத்தில் 2021,க்கான பருவமழை  ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை,  வழக்கமான இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. 

வழக்கமாக இந்த காலகட்டத்தில்,  தமிழகம் பெறவேண்டிய மழைப்பொழிவு 217.8 மி.மீ ஆக இருந்துவந்த நிலையி்ல் நடப்பு ஆண்டில்  275.8 மி.மீ   பெய்து , இயல்பை விட 27 சதவிகிதம்  அதிகமாக பெய்துள்ளது. 



அறைக்குள் சிக்கிய குழந்தை...

 திண்டுக்கல்லில் உள்ள  மேங்கில்ஸ்ரோடு  பகுதியில் கே.எஸ்.ஆர் என்ற அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு  வீட்டினுள் குழந்தை ஒன்று  வீட்டின் உள் பக்கம் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு விட்டது.

இதனால் அறைக்குள் சிக்கிக்கொண்டு குழந்தை தவிப்பதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட தீயணைப்புத் துறையினர் குழுவினருடன் சென்று குழந்தையை  பத்திரமாக மீட்டுள்ளனர்.





முருங்கைக் கீரை : முக்கிய பயன்கள்.

 முருங்கை மரத்தில் ("Moringa oleifera") இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.  

 

இதன் தாவரவியல் பெயர் "Moringa oleifera". இதில் "muringa" என்ற பெயர் , "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும். 

இதில் உள்ள சத்துக்கள்.

 தண்ணீர் : 63.8% 

புரதம் : 6.1% 

கொழுப்பு : 10% 

தாதுஉப்புக்கள் : 4% 

நார்ச்சத்து : 6.4% 

மாவுச்சத்து : 18.7% 

வைட்டமின் ஏ : 11300/IU 

வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம் 

(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு) 

சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம் 

குளோரின் : 423 மில்லி கிராம் 

இரும்புச் சத்து : 259 மில்லி கிராம் 

ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம் 

கந்தகச் சத்து : 137 மில்லி கிராம் 

மாங்கனீஸ் : 110 மில்லி கிராம் 

நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் .

வைட்டமின் சி : 220 மில்லி கிராம் 

 *முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன. 

முருங்கையின் பயன்கள்.....

  *கண்ணுக்கு மிகவும் நல்லது.  

*மலச் சிக்கலைத் தீர்க்கும். 

  *தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். 

 *வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன. 

 * முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். 

 *நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும். 

 *கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 

 *முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.  

 *முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.  இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 

 * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். 

 *முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. 

 * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். 

 * இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.



காவல் ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாம்: தமிழக முதல்வர் துவக்கி வைப்பு.

 சென்னை வண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உடற்பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஒரு ஆண்டுக்கான பயிற்சி நடந்தது.

இதனை  தமிழக முதல்வர் மு.கஸ்டாலி்ன் காணொளி காட்சி மூலம்  துவக்கி வைத்தார்.



அதிகரிக்கும் விடுமுறை :குறையும் மாத சம்பளம் : அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது புதிய விதி!

 மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெறப்பட்ட புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை பெறவுள்ளது.

இந்த புதிய ஊதிய விதிகள் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019இதன்படி

ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. 

தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும். 

மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும். 

மீதமிருக்கும் மூன்று நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். 

உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது.  தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.

புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். 

இதுதவிர வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவிகிதத்துக்கு மேல் செல்லக் கூடாது. 

அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும்.  ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும்.



இந்தியாவில் ஆயுளை குறைக்கும் காற்று மாசு: அதிர்ச்சி தகவல்.

 இந்தியாவின்  டெல்லி  உள்ளிட்ட மத்திய , கிழக்கு  மற்றும் வட பகுதிகளில் வாழும் 4 கோடியே 80 லட்சம் மக்கள் அதிக அளவிலான காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த மக்களின் ஆயுள் 9 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் சிகாகோ  ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.

முன்னதாக  சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐக்யூ ஏர் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உலகின் மாசு அதிகமுள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. 

 2019ஆம் ஆண்டு, இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தியாவின் தேசிய தூய்மை காற்றுதிட்டம்  தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை குறைப்பது, உயிரி எரிப்பதிலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பயன்பாட்டிலும் கடுமையான விதிகளை அமல்படுத்துவது, தூசு மாசுவை குறைப்பது, கண்காணிப்பு உபகரணங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.



சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ17. 6 லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய்  விற்பனைக்கான ஏலம் இன்று நடைபெற்றது. 

இதில் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 829 மூட்டைகளில் 27 ஆயிரத்து 121 கிலோ எடையுள்ள நிலக்கடலை காயை  விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் ஒரு கிலோ நிலக்கடலைக்காய்  குறைந்தபட்ச விலையாக ரூ57 .06 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ67 .00 காசுகள், சராசரி விலையாக ரூ62 .39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ 17 இலட்சத்து 6 ஆயிரத்து 238 க்கு விற்பனையானது.



ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க உத்தரவு.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 1431 ம்பசலி ஆண்டிற்கான அடங்கல் சான்றுகோரி வரும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி உடனுக்குடன் அடங்கல் சான்று வழங்க அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என  ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன்  சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.



செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தாமரைப்பாளையம் , கருத்திபாளையத்தில் ரூ20லட்சத்தில் பணிகள் துவக்கம்: தி.மு.க மாநில நிர்வாகி பங்கேற்பு.

 கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருத்திபாளையம் கிராமத்தில் இருந்துவரும் சுடுகாடு கடந்தபல வருடங்களாக சீரற்ற நிலையில் இருந்து வந்தது.

இதனை சீரமைத்து தருமாறு அந்தக்கிராமத்தை சேர்ந்த மக்கள் உங்கள் தொகுதியின் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இதனை ஏற்ற தமிழகஅரசு  ரூ10 லட்சம் மதிப்பில் கருத்திபாளையம் சுடுகாட்டை சீரமைக்கும்  முயற்சிக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் இன்று கருத்திபாளையத்தில் நடந்தது.

அதேபோல தாமரைப்பாளையத்தில்  ரூ 10 லட்சம் மதிப்பில்  காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.இந்த இரண்டு பணிகளுக்குமான பூமி பூஜையில் தி.மு.க வின் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம், துவக்கி வைத்தார்.





எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ 85.15 இலட்சத்துக்கு தேங்காய்பருப்பு விற்பனை.

 ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு  விற்பனைக்கான ஏலம் இன்று  நடைபெற்றது. 

இதில்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1773 மூட்டைகளில் 83 ஆயிரத்து 774 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை  விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.  

இது முதல்தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ101.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ105 .25 காசுகள், சராசரி விலையாக ரூ105 .25 காசுகள்,

இரண்டாம் தர பருப்பு  குறைந்தபட்ச விலையாக ரூ74. 89 காசுகள், அதிகபட்ச விலையாகவிலையாக ரூ97 .39 காசுகள்,  சராசரி விலையாகவிலையாக ரூ 94 39 காசுகள் என்ற விலைகளில்  மொத்தம் ரூ85 இலட்சத்து 15 ஆயிரத்து 937 க்கு விற்பனை செய்யப்பட்டது.



சிவகிரியில் தி.மு.க கருத்துக்கேட்புக்கூட்டம்.

 சிவகிரி மகாமாரியம்மன்கோயில் திருமணமண்டபத்தில் இன்று தி.மு.க மாநில நெசவாளர் அணியின் சார்பில் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு தி.மு.க மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம் தலைமை வகித்தார். கொடுமுடி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நடராஜன், கொல்லங்கோயில் பேரூர் செயலாளர் சந்திரசேகர், சிவகிரி பேரூர் செயலாளர் கோபால், ஒன்றிய துணை செயலாளர் பாபுராஜா, முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 

‘‘நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் கடந்த 20 ஆண்டுகளாக  மாறாமல் உள்ளது அதனை மாற்றித்தரவேண்டும். கைத்தறி ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன அவற்றை தடை செய்யவேண்டும். நெசவாளர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு அச்சு,மற்றும் நாடாக்களை முன்பிருந்ததுபோல அரசே வழங்கவேண்டும். விலைவாசிக்கேற்ப கூலி உயர்வு வழங்கவேண்டும். நெசவாளர் நல காப்பீட்டுத்தொகையை அதிகரித்து அதனை செயல்படுத்தவேண்டும்.  சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் மற்றும் கருணை தொகைய  ரூ6 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

 கைத்தறி ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்யவேண்டும். நெசவாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழான மானிய தொகையை ரூ5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.

 நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கவேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய  மனுக்களை நெசவாளர்கள் மற்றும் கைத்தறி சங்க பணியாளர்கள் அளித்தனர்.’’




கொரமங்களாவில் கோரவிபத்து ஏழு பேர் பலி.

 பெங்களூர் கொரமங்களாவில் அதிகவேகமாக சென்ற கார் சாலையின் பக்கவாட்டிலிருந்த மின்கம்பத்தில் மோதி நொறுங்கியதில் காரில் சென்ற மூன்றுபெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகினர். 

பலியானவர்களில் ஒருவர் ஒசூர் எம்.எல்.ஏ.,  பிரகாஷ்சின்  மகன் கருணாசாகர் (24) என்பது தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



திங்கள், 30 ஆகஸ்ட், 2021

கடைசியில் ரயிலையும் தள்ளிவிட வேண்டியதாகிவிட்டது.

 மத்தியப் பிரதேசத்தில்  ஹர்த் என்ற இடத்தில் ரயிலில மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது தொழில்நுட்பகோளாறால்  ஏற்பட்ட  பழுதான ரயிலை  ரயில்வே ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் பலர் சேர்ந்து ஒரு தண்டவாளத்திலிருந்து வேறு தண்டவாளத்துக்கு பேருந்து போல் கைகளால் தள்ளிச் சென்றனர்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

பேட்டரியால் இயங்கக்கூடிய 'Neobolt'

 பேட்டரியால் இயங்கக்கூடிய 'Neobolt'  எனும் மூன்று சக்கர வாகனத்தை தயாரித்துள்ளது IIT Madras.

இந்த வாகனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 கி.மீ. வரை செல்லும் வகையிலும், அதிகபட்ச வேகமாக மணிக்கு 25 கி.மீ. வரை செல்லும் வகையில் 
தயாரிக்கப்பட்டுள்ளது.

DSP மகனுக்கு சல்யூட் அடித்த SI தாய் .

 DSP மகனுக்கு சல்யூட் அடித்த SI தாய்  இந்த சம்பவம் குஜராத்தில் நடந்தது. வைரலாகியது


புகைப்படம்.

தமிழகத்தில் உதயமாகும் 29 புதிய நகராட்சிகள் எவை எவை...?

 பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர் 


இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம்


திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி.

தமிழகத்தில் இப்படியும் அமைச்சர்கள்....

 பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் ஏழுபேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர் கக்கன்...

இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
போலீஸ்,பொதுப்பணி,விவசாயம்,சிறுபாசனம்,கால்நடை_பராமரிப்பு,உள்துறை,சிறைத்துறை,நிதி,கல்வி,தொழிலாளர்_நலம்,மற்றும் மதுவிலக்கு என 13 துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
பதிமூன்று துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..

ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை... பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில் படுத்துவிட்டார்..

நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்...

யார் நீங்கள்
எழுந்து செல்லுங்கள்
இங்கெல்லாம் படுக்கக் கூடாது
என்றனர்

அதற்கு அமைதியாக பதிலளித்தார்..
அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன்
அடுத்தரயில் வந்தவுடன் சென்று விடுகிறேன் என்றார். அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்

அய்யா மன்னித்து விடுங்கள் நீங்கள் முதல் வகுப்பு ஓய்வறையில் போய் படுங்கள்.. என்றனர்

வேண்டாம்.. இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்... அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.


பக்கங்கள்