வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 10 செப்டம்பர், 2011

கண்டக்டர் மீதுபுகார்...

பெண் பயணியிடம் தகராறு செய்த பஸ் கண்டக்டர்மீது
காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
  கொடுமுடி மேற்கு அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் ஷாலினி(29). இவர்
வெள்ளிக்கிழமை இரவு கருர் பஸ்நிலையத்தில் நின்றிருந்த அரசு
போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏறி கொடுமுடி வருவதற்காக  அமர்ந்துள்ளார்.
   அப்போது, நடத்துனர் ஷாலினியை பஸ்ஸை விட்டு கீழே இறங்குமாறு கூறி தகாத
வார்த்தைகளில் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஷாலினி
கொடுமுடியில் உள்ள தனது உறவினர்களிடம் செல்போனி்ல் தெரிவித்துள்ளார்.
   கொடுமுடி பஸ்நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்
நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த
போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
நடத்துனர் மீது ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார்
விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்