வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 8 செப்டம்பர், 2011

மனுநீதி நாள் முகாம்...

                                                              
    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள காகம் கிராமத்தில்..                                     

மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு ஈரோடு கோட்டாட்சிர் சுகுமார் தலைமை வகித்தார்.

சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பன்னீர் செல்வம், கூடுதல் வட்டாட்சியர் அருணாச்சலம், மண்டல துணை வட்டாட்சியர் சேதுராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காகம் கிராம நிர்வாக அலுவலர் ஆசைத்தம்பி வரவேற்றார்.

  காகம் ஊராட்சி தலைவர் அருக்காணி,  மொடக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் காகம் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முகாமில்  8 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், ஆதரவற்றோர் உதவித்தொகை 2 பேருக்கும், விதவை உதவித்தொகை 5 பேருக்கும், கணவரால் கைவிடப்பற்றோருக்கான உதவித்தொகை ஒருவருக்கும், உடல் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை 3 பேருக்கும், 55 பேருக்கு பட்டா மாறுதலும் வழங்கப்பட்டன.  

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்