வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

பேருந்துகளை இயக்க கோரிக்கை...




புதிய வழித்தடங்களில்
பேருந்துகளை இயக்க வேண்டுமென

           ஈரோடு மாவட்டம் கொடுமுடியை மையமாக வைத்து புதிய வழித்தடங்களில்
பேருந்துகளை இயக்க வேண்டுமென உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு சார்பில்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குழுவின் இணைச் செயலர் ஆ.ராஜசுப்ரமணியன் மொடக்குறிச்சி
தொகுதி எம்எல்ஏ ஆர்.என்.கிட்டுசாமிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு
விவரம்: தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், கோயில் நகராகவும்
பிரசித்தி பெற்ற கொடுமுடிக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்
இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

   பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலனை முன்னிட்டு, கொடுமுடியை
மையமாக வைத்து புதிய வழித்தடங்களில் ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக்
கழகத்தின் சார்பில் பேருந்துகளை இயக்க வேண்டும்.

   கொடுமுடியிலிருந்து சென்னை, சேலம், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை,
சிவகாசி, தேனி, போடி, இராஜபாளையம், திருத்தனி, சிதம்பரம் உள்ளிட்ட
ஊர்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்.                                                             

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்