வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

முதல் இடம்...

        
ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில்...ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் சிவகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  ஈரோடு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் ஈரோடு வ.உ. சிதம்பரனார் விளையாட்டு அரங்கில் நடந்தது.  குழு  விளையாட்டுப்போட்டியாக நடைபெற்ற இந்தப்போட்டிகளில் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடந்த பூப்பந்துபோட்டியில்  வெற்றிபெற்று முதல் இடத்தை பிடித்து மண்டல அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர்.
17 வயதுக்குட்பட்டோருக்கான பூப்பந்துபிரிவில் இரண்டாம் இரண்டாம் இடமும், கேரம் ஒற்றையர் பிரிவில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்றன.
அத்துடன் சாலை மிதிவண்டிப்போட்டியில் இந்தப்பள்ளியைச்சேர்ந்த சிவக்குமார் என்ற மாணவர் முதல் இடம் பெற்றார். அவரது முயற்சியை பாராட்டி பள்ளியின் சார்பில் பந்தய மிதிவண்டி வழங்கப்பட்டது.
12 பிரிவுகளில் சிறப்பாக வெற்றி பெற்ற இந்தப்பள்ளியின் மாணவர்களை பள்ளியின்  தலைமை ஆசிரியர் ஆறுமுகம்,
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பாராட்டினர்.

                                                                   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்