வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 5 செப்டம்பர், 2011

30 கிலோ தங்கம் ரூ 1.5 கோடி ...

                                                                       

                                              30 கிலோ தங்கம்  ரூ 1.5 கோடி
                               

ஜனார்த்தன ரெட்டி, சீனுவாச ரெட்டி வீடுகளில் கோடிக்கணக்கில் பணம், 30 கிலோ தங்கம் பறிமுதல்

சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக  கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

 அவரதுவீட்டில் இருந்து 30 கிலோ தங்கம் மற்றும் ரூ 1.5 கோடி பணத்தை சிபிஐ போலீசார்கைப்பற்றினர் .  ஜனார்த்தன ரெட்டியின்  சுரங்க  நிர்வாக
இயக்குனர் சீனுவாச ரெட்டியின் வீட்டில் ரூ 3 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

ஆயுதங்கள் கடத்தத் தயாராக  இருந்த ஜனார்த்தன ரெட்டியின் ஹெலிகாப்டர்களும் கைப்பற்றப்பட்டதாக  தெரிகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் ஹைதராபாத் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுவார்கள். இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  சிபிஐ தரப்பில்
திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில லோகயுக்தா அமைப்பு  சட்டவிரோத சுரங்க முறைகேடுகள் குறித்து  வெளியிட்ட  அறிக்கையில்   சட்டவிரோத சுரங்கத் தொழிலில்  ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி இருவருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  சிபிஐ அதிகாரிகள்  ஜனார்த்தன் ரெட்டியின் பெல்லாரி வீட்டில் இன்று  அதிரடி சோதனை நடத்தி  ஜனார்த்தன்
ரெட்டி,  டிவி சீனுவாச ரெட்டி இருவரையும்  கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்