தமிழகத்தின்
சிறந்த சுற்றுலாத் தலமாகவும்,கோயில் நகராகவும் பிரசித்தி பெற்ற
கொடுமுடிக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இங்கு ரயில் மூலம் வரும் வெளி மாநிலப்பயணிகள் மற்றும் கொடுமுடி
சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள்
உள்ளிட்டோர் கம்ப்யூட்டர் முன்பதிவுக்காக ரயில்நிலையத்திற்கு காலை 8
மணிக்கு சென்றால் 10 மணிக்குதான் முன்பதிவு தொடங்கும் என ஊழியர்கள்
கூறுகின்றனர்.
ஈரோடு, கரூர் உள்ளிட்ட மற்ற ரயில்நிலையங்களில் காலை 8 மணிக்கு
துவங்கும் முன்பதிவு கொடுமுடியில் 10 மணிக்கு துவங்குவதால் இப்பகுதி
பயணிகளுக்கு தேவையான முன்பதிவு டிக்கட் கிடைப்பதில்லை. மேலும் மாலை 5
மணிக்கு முன்பதிவு நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
முன்பதிவு நேரத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக