வருகை தந்தமைக்கு நன்றி.. !

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

செருப்பு வாங்க தனிவிமானம் அனுப்பும் முதல்வர்...

                                   

      செருப்பு வாங்குவதற்காக தனிவிமானம் அனுப்பினார். இந்திய நாட்டின்
மாநில முதலமைச்சர் என்ற தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கடந்த 2008 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ம்தேதியில்
அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
 இந்தியாவின் உத்தரபிரதேச முதலமைச்சராக இருப்பவர் மாயாவதி.இவர்
தனக்கு புதிய காலணி( செருப்பு) வாங்கவேண்டும் என எண்ணினால்
 தனது ஜெட்விமானத்தை மும்பைக்கு அனுப்பி தான் விருப்பபட்டதை  வாங்கிக்கொள்வார்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.

   தான் உண்ணும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக
அந்தகால மன்னர்கள் தாங்கள் சாப்பிடும் முன்  அதனை பரிசோதிப்பதற்காக
அதற்கென நியமிக்கப்பட்ட மனிதர்களுக்கு கொடுத்து சாப்பிட சொல்வார்கள்.
அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை என்றால் தான் மன்னர்கள் அந்த உணவை
உண்பார்கள். அது போல தற்போது மாயவதியும் தனது உணவில் விஷம் கலக்கப்
பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக  பரிசோதகர்கள் 2 பேரை நியமித்துள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது.     
                                

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்