வாகன எரிபொருளில் எத்தனால்
பயன்பாடு வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுடெல்லிக்கு நடைபயணம் செல்ல உள்ளதாக இந்திய மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரோட்டில் இயக்கத்தின் கள அமைப்பாளர் அறச்சலூர் நல்லசாமி கூறியதாவது: நம் நாட்டில் 20 சதவிகித பெட்ரோல் மட்டுமே கிடைத்துவருகிறது.
80 சதவிகித எரிபொருளை இறக்குமதி செய்துவருகிறோம். இதனால் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் கோடி அந்நிய செலவாணி இழப்பு ஏற்படுகிறது.
பிரேசில் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாகனங்களில் எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைகிறது. வாகன எரிபொருட்களில் எத்தனாலை சேர்க்க வலியுறுத்தி இந்திய மக்கள் இயக்கம் தனது இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்தை ஈரோட்டில் இருந்து புதுடெல்லிக்கு நடத்த உள்ளது.
வர இருக்கிற 20 ம்தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனை அடுத்து 21,22 ம்தேதிகளில் பிரதமர், குடியரசு தலைவர், மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசில் கட்சிதலைவர்கள், நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மனுக்கள் தரப்படுகிறது என்றார்.
பயன்பாடு வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுடெல்லிக்கு நடைபயணம் செல்ல உள்ளதாக இந்திய மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரோட்டில் இயக்கத்தின் கள அமைப்பாளர் அறச்சலூர் நல்லசாமி கூறியதாவது: நம் நாட்டில் 20 சதவிகித பெட்ரோல் மட்டுமே கிடைத்துவருகிறது.
80 சதவிகித எரிபொருளை இறக்குமதி செய்துவருகிறோம். இதனால் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் கோடி அந்நிய செலவாணி இழப்பு ஏற்படுகிறது.
பிரேசில் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாகனங்களில் எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைகிறது. வாகன எரிபொருட்களில் எத்தனாலை சேர்க்க வலியுறுத்தி இந்திய மக்கள் இயக்கம் தனது இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்தை ஈரோட்டில் இருந்து புதுடெல்லிக்கு நடத்த உள்ளது.
வர இருக்கிற 20 ம்தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனை அடுத்து 21,22 ம்தேதிகளில் பிரதமர், குடியரசு தலைவர், மற்றும் மத்திய அமைச்சர்கள், அரசில் கட்சிதலைவர்கள், நாடாளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மனுக்கள் தரப்படுகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக