வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 18 நவம்பர், 2013

கணிணி கேட்டு ஈரோடு மாணவிகள் மனு.





ரோட்டில்  லேப்டாப் வழங்க
க்கோரி  மாணவ மாணவிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த  முன்னாள் மாணவிகள்47 பேர், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 41 பேர், கலைமகள் கல்வி கல்வி நிலைய மாணவிகள் 137 பேர் உள்ளிட்ட அனைவரின் சார்பாக மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் மனு ஒன்று தரப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மேல்நிலைப்பாடப்பிரிவில் கணிணி அறிவியல் படித்தோம் அப்போது  சுயநிதி கல்வி படித்த  மாணவ மாணவிகளுக்கு அரசின் கணிணி வழங்கப்பட்டது. எங்களுக்கு  மட்டும் வழங்கப்பட வில்லை.  அதனை தற்போது வழங்க  ஆவண செய்யவேண்டும் என்று  கூறியிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்