பார்வை திறன் குறைவுடைய மாணவ மாணவிகளுக்கான கண்கண்ணாடி
தேவைப்படுவர்கள் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பம் தருமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: 2012---13 ம் நிதியாண்டில், ஈரோடு மாவட்டத்தில் அரசு சிறப்பு பள்ளிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் சாதாரண பள்ளிகளில் பார்வைத்திறன் குறைவுடைய மாணவ மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் பார்வைதிறன் குறைவுடைய மாணவ மாணவியர்களுக்கு பாடநூல்களில் எழுத்துக்களை பெரிதாக்கி காட்டி சுயமாக படிக்க உதவும் கருவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படுகிறது.
எனவே தகுதியான பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்வி பயிலும் சான்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்த மாதம் நவம்பர் 29 க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக