ஈரோட்டில் அனுமதி பெறாமல்
செயல்பட்ட சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு துறையினர் இடித்தனர்.
ஈரோட்டில் உள்ள சூரம்பட்டி மாதவி வீதி, மற்றும் பெரிய சேமூர் பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் 4 சாயப்பட்டறைகள் செயல்பட்டுவருவதாக ஈரோடு ஆட்சியர் சண்முகத்துக்கு புகார்கள் வந்தன.
இதனை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டுத்துறை பொறியாளர் ராமராஜ் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு போலிஸாருடன் நேரில் சென்றனர்.
அங்கு செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகளை இடித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக