ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில்
தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித்தார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் அவரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ஆட்சியர் சண்முகம் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை வாசிக்க அரசு அலுவலர்கள் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
டாக்டர் சுகுமார், துணை ஆட்சியர் பயிற்சி பரிதாபானு, சந்தோஷினி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக