வருகை தந்தமைக்கு நன்றி.. !

வியாழன், 21 நவம்பர், 2013

வாய்ப்பு...


  தேசிய அளவிலான
லோக் அதாலத்  எனும் மக்கள் நீதிமன்ற நாள் நாளை  நவ23 ம்தேதி நடக்கிறது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்துடன் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த லோக்அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

இதில் பங்கு பெறுபவர்களுக்கு  முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்றக்கட்டணம் திரும்பப்பெறும் வாய்ப்பு உள்ளது. தவிர வழக்குகளில்  தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும்.

 மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது.

வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறுவிதமான சட்டப்பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காண வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விபரங்கள் அறிய அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்டப்பணிகள் அலுவலகத்தை அணுகுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்