ஈரோடு அருகே உள்ள காலிங்கராயன் பாளையத்தில்
தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் முதல்வராக கோகுல கிருஷ்ணன் (42) என்பவர் உள்ளார்.
இவர் பள்ளியில் படித்துவரும் சிலமாணவ மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்தனர். முதல்வர் கோகுலகிருஷ்ணனை போட்டுத்தாக்கினர்.
இதனால் வலி தாங்க இயலாத கோகுலகிருஷ்ணன் அங்குள்ள ஒரு அறைக்குள் ஓடி சென்று அறையின் கதவை பூட்டிக்கொண்டு இருந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்த பவானி போலிஸ் டி.எஸ்.பி ஆறுமுகம், சித்தோடு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கோகுலகிருஷ்ணனை அழைத்து சென்றனர்.
இதன்பின்னர் பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அய்யணன் பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே கோகுலகிருஷ்ணன் மீது பெற்றோர்கள் போலிசில் புகார் தந்ததின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சுமார் ஆயிரத்து 750 மாணவ மாணவிகள் படித்துவரும் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் நடந்த சம்பவம் பொதுமக்களிடம் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக