வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 8 செப்டம்பர், 2021

ரயில்வர தாமதம்:பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

 கடந்த 2016ல் ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்கு ஒரு குடும்பத்தினர் ரயில்பயணம் மேற்கொள்ளவிருந்தனர். அவர்கள் செல்லவேண்டிய ரயில் வருவதற்கு நான்குமணிே நேரம் தாமதமாகியது.

இதனால் செல்லவேண்டிய இடத்துக்கு வாடகைக்காருக்கு  அதிக வாடகை கொடுத்து  அந்த குடும்பத்தினர் சென்றனர். 

பின்னர் இது  குறித்து அந்த குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். 

தேவையற்ற தாமதம், சேவைக்குறைபாடு என்று தொடரப்பட்ட இந்த வழக்கு  மாவட்டநுகர்வோர் மன்றம்,  மாநில நுகர்வோர் தீர்ப்பாயம், தேசியநுகர்வோர் தீர்ப்பாயம், என பல நீதிமன்றங்களுக்கு சென்றது.

அனைத்து நீதிமன்றங்களும் நுகர்வோருக்கு சாதகமாக தீர்ப்பளித்தநிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து ரயில்வே துறை மேல்முறையீடு செய்துகொண்டிருந்தது. கடைசியாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த வழக்கு சென்றது.

விசாரணையின்முடிவில்  நீதிபதிகள் ஏழு பக்கங்களில் தீர்ப்பளித்தனர். 

‘‘போட்டியும் நம்பக்தன்மையும், தேவைப்படும் நாட்கள் இப்போது உள்ள நிலையில், பொதுத்துறை போக்குவரத்து நிலைத்திருக்க தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவேண்டும். 

பணிக்கலாச்சாரத்தையும், செயல்முறையையும் மேம்படுத்தவேண்டும். 

அதிகாரிகள்  மற்றும் நிர்வாகத்தின் கருணையில் பயணிகள் இருக்கமுடியாது. 

ரயில்தாமதமாக  இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான ஆதாரங்களையும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கவில்லை. 

ஜம்முவிற்கு தாமதமாக  ரயில்வந்ததற்கான காரணம் இல்லை.  காரணங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதபோது  ரயில் தாமதமாக வந்ததற்கும் , புறப்பட்டதற்கும் ரயி்ல்வே சரியான காரணங்களை கூறுவது அவசியம். 

குறைந்த பட்சம் ரயில்தாமதாக வந்ததற்கு விளக்கம் அளிக்கவேண்டும் , அதிலும் ரயில்வே தோல்வி அடைந்துவிட்டது.

 பயணிகளுக்கு பயணி்க்கும் நேரம் விலைமதிப்பில்லாதது அடுத்தடுத்த பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பார்கள். 

இந்த வழக்கில்  ஜம்முவிலிருந்து ஸ்ரீ நகருக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்கள். 

ரயில் தாமதமாக இயக்கப்பட்டதற்கு எந்தவிதமான காரணமும், ஆதாரமும் இல்லாத நிலையில்  தாமதத்தை நியாயப்படுத்தாத நிலையில் , பயணிக்கு இழப்பீடு வழங்க ரயில்வே கடமைப்பட்டுள்ளது.

 எனவே ரயில்வேயின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தீர்பளித்தனர்.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்