இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட மத்திய , கிழக்கு மற்றும் வட பகுதிகளில் வாழும் 4 கோடியே 80 லட்சம் மக்கள் அதிக அளவிலான காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த மக்களின் ஆயுள் 9 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் சிகாகோ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.
முன்னதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐக்யூ ஏர் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உலகின் மாசு அதிகமுள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.
2019ஆம் ஆண்டு, இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தியாவின் தேசிய தூய்மை காற்றுதிட்டம் தொழிற்சாலைகளின் உமிழ்வுகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுவை குறைப்பது, உயிரி எரிப்பதிலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பயன்பாட்டிலும் கடுமையான விதிகளை அமல்படுத்துவது, தூசு மாசுவை குறைப்பது, கண்காணிப்பு உபகரணங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக