வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 1 செப்டம்பர், 2021

முருங்கைக் கீரை : முக்கிய பயன்கள்.

 முருங்கை மரத்தில் ("Moringa oleifera") இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.  

 

இதன் தாவரவியல் பெயர் "Moringa oleifera". இதில் "muringa" என்ற பெயர் , "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும். 

இதில் உள்ள சத்துக்கள்.

 தண்ணீர் : 63.8% 

புரதம் : 6.1% 

கொழுப்பு : 10% 

தாதுஉப்புக்கள் : 4% 

நார்ச்சத்து : 6.4% 

மாவுச்சத்து : 18.7% 

வைட்டமின் ஏ : 11300/IU 

வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம் 

(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு) 

சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம் 

குளோரின் : 423 மில்லி கிராம் 

இரும்புச் சத்து : 259 மில்லி கிராம் 

ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம் 

கந்தகச் சத்து : 137 மில்லி கிராம் 

மாங்கனீஸ் : 110 மில்லி கிராம் 

நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் .

வைட்டமின் சி : 220 மில்லி கிராம் 

 *முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன. 

முருங்கையின் பயன்கள்.....

  *கண்ணுக்கு மிகவும் நல்லது.  

*மலச் சிக்கலைத் தீர்க்கும். 

  *தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும். 

 *வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன. 

 * முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும். 

 *நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும். 

 *கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 

 *முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.  

 *முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.  இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 

 * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். 

 *முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. 

 * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். 

 * இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்