வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

சிவகிரி , அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ 36 .56இலட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று எள்  விற்பனைக்கான  ஏலம் நடைபெற்றது.

இதில்  சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 216 மூட்டைகளில் 16 ஆயிரத்து126 கிலோ எடையுள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் கருப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ76 . 39 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ101. 99 காசுகள், சராசரி விலையாக ரூ96 .59 காசுகள் , 

சிவப்பு ரக எள் குறைந்தபட்ச விலையாக ரூ75 .19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ124 .11 காசுகள், சராசரி விலையாக ரூ 92 .72 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ15 இலட்சத்து 36 ஆயிரத்து 878 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்பட்டது.

இதேபோல

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  நடந்த தேங்காய் பருப்பு விற்பனையில்  22 ஆயிரத்து 72 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு  விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் தர பருப்பு குறைந்தபட்ச விலையாகரூ 99 . 39 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ103 .49 காசுகள், சராசரி விலையாக ரூ103 39 காசுகள்,இரண்டாம் தர பருப்பு  குறைந்தபட்ச விலையாக ரூ75  89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 95 .32 காசுகள், சராசரி விலையாக ரூ91 . 99 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ21 இலட்சத்து 19 ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆக சிவகிரி அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் ரூ36லட்சத்து 56 ஆயிரத்து 148க்கு விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்