வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 1 செப்டம்பர், 2021

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ17. 6 லட்சத்துக்கு நிலக்கடலை காய் விற்பனை.

 ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய்  விற்பனைக்கான ஏலம் இன்று நடைபெற்றது. 

இதில் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 829 மூட்டைகளில் 27 ஆயிரத்து 121 கிலோ எடையுள்ள நிலக்கடலை காயை  விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் ஒரு கிலோ நிலக்கடலைக்காய்  குறைந்தபட்ச விலையாக ரூ57 .06 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ67 .00 காசுகள், சராசரி விலையாக ரூ62 .39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ 17 இலட்சத்து 6 ஆயிரத்து 238 க்கு விற்பனையானது.



கருத்துகள் இல்லை:

பக்கங்கள்