கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருத்திபாளையம் கிராமத்தில் இருந்துவரும் சுடுகாடு கடந்தபல வருடங்களாக சீரற்ற நிலையில் இருந்து வந்தது.
இதனை சீரமைத்து தருமாறு அந்தக்கிராமத்தை சேர்ந்த மக்கள் உங்கள் தொகுதியின் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதனை ஏற்ற தமிழகஅரசு ரூ10 லட்சம் மதிப்பில் கருத்திபாளையம் சுடுகாட்டை சீரமைக்கும் முயற்சிக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் இன்று கருத்திபாளையத்தில் நடந்தது.
அதேபோல தாமரைப்பாளையத்தில் ரூ 10 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.இந்த இரண்டு பணிகளுக்குமான பூமி பூஜையில் தி.மு.க வின் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம், துவக்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக