வருகை தந்தமைக்கு நன்றி.. !

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அமெரிக்க போலிஸ் பணியில் இலங்கை தமிழர்கள்...

அமெரிக்காவில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழ்போலிஸாரைநியமிக்கலாம் என இலங்கையின் பாதுகாப்புதுறை செயலர்

 கோத்தபய ராஜபக்சே  நக்கலடித்துள்ளார்.

  சமீபத்தில் இலங்கைக்கு அமெரிக்காவின் தெற்காசியவுக்கான அமெரிக்க அரசின் உதவி செயலர் ராபர் ஓ பிளக் வந்தார்.

   இலங்கை வந்த அவர் யாழ்பாணத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு தமிழ்போலிஸாரை பணியில் அமர்த்தவேண்டும் என கருத்து தெரிவித்தார்.

  அவரது கருத்தை நக்கல் செய்யும் விதமாக தற்போது இலங்கையின் பாதுகாப்பு துறை செயலரான கோத்தபயராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.
 
  இலங்கையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழ்போலிஸாரை பணியில் அமர்த்தவேண்டிய தேவை இல்லை. அப்படி ஒரு தேவை ஏற்பட்டால்

அமெரிக்காவில் உள்ள காவல் நிலையங்களுக்கு தமிழ்போலிஸாரை பணியில் அமர்த்தட்டும் என கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

பக்கங்கள்