வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 14 செப்டம்பர், 2011

ராஜபக்சே வாங்கும் பத்திரிக்கைக்கு ஆசிரியராகிறார் இந்திய பத்திரிக்கையாளர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே வாங்கப்போகும் பத்திரிக்கை ஒன்றுக்கு
இந்தியாவைச்சேர்ந்த ஆங்கிலப்பத்திரிக்கையாளர் ஒருவர் ஆசிரியர் ஆகிறார். அவருக்கு
மாதச்சம்பளம் இரண்டு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக

இலங்கை ஊடகம்
ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது.
  
     இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக உள்ளவராக கூறப்படுபவர்
வர்த்தகர் அசங்கசெனிவிரத்ன. இவர் மூலமாக கடுமையான பொருளாதர நெருக்கடியில்
சிக்கித்தவிக்கும் சண்டே லீடர் பத்திரிக்கையை வாங்க முயற்சி நடப்பதாக இலங்கையைச்சேர்ந்த
லங்கா ஈ நியூஸ் என்ற பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.

               இந்த தகவலை வர்த்தகர் அசங்க செனிவிரத்ன மறுத்துள்ளார்.
 
         இதே போன்று  தனது பத்திரிக்கை குறித்து வெளியான செய்திகள் தவறானது என
சண்டே லீடர் தெரிவித்துள்ளது.

                                                                   

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்