இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் கழிவறையில் ரகசியகேமரா பொருத்தப்பட்டிருந்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய மத்திய அரசு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனமாக நேஷனல் டெக்னிகல்
ரிசர்ச் ஆர்கனைஷேசன் என்ற நிறுனம் உள்ளது. என்.டி.ஆர்.ஓ என்ற பெயரில் அழைக்கப்படும்
இந்த நிறுவனம் பிரதமர் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் உள்ள கழிவறை ஒன்றில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையிலான
ரகசிய கேமரா ஒன்றை அதிகாரி ஒருவர்பொருத்தியுள்ளார்.
அந்த காமெரா வழியாக கழிவறை சம்பவங்களை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த கழிவறைக்கு சென்ற ஒரு பெண் ஊழியர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டு
கழிவறையை சோதித்தபோது காமெரா பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பெண் அதிகாரி ஒருவரிடம் புகார் தந்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்துக்கு காரணமான
அதிகாரி மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக