கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் நன்கொடைகளை கண்காணிப்பதற்காக
சிறப்பு புலனாய்வு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த புலனாய்வு பிரிவு விசாரணை
பிரிவு 5 என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்சிகள் செலவழிக்கும் தேர்தல் பணிக்கான செலவுகள் மற்றும் கட்சிகளுக்கு வழங்கப்படும்
நன்கொடைகள், நிதி போன்றவற்றை கண்காணிக்கும் பணியை இந்த பிரிவு மேற்கொள்கிறது.
சட்டப்படியான விதிப்புகளுக்கு உட்பட்டு கட்சிகள் நடக்கின்றனவா?என்பதை
கண்காணிக்கும் வகையில் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ள நிலையில், தற்போது வரி செலுத்துவோரை
கண்காணிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு-4 விசாரணை பிரிவு 5 என்ற பிரிவுகள்
தற்போது துவங்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக