வருகை தந்தமைக்கு நன்றி.. !

திங்கள், 19 செப்டம்பர், 2011

விளையாட்டுத் திடல்வேண்டும்

ஈரோடு மாவட்டம்     கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில்பார்க்,
விளையாட்டுத் திடல் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டுமென இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
  இக்கட்சியின் கொடுமுடி நகர கிளை மாநாடு வியாழக்கிழமை மாலை நிர்வாகிகள்
கே.கந்தசாமி, ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்
எம்.குணசேகரன், துணைச் செயலாளர் ஆ.ராஜசுப்ரமணியன்  முன்னிலை வகித்தனர்.
நகரச் செயலாளர் ஜி.எம்.சக்திவேல் வரவேற்றார்.
   மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் கொடியேற்றினார்,.
மாவட்ட செயலாளர் வி.பி.குணசேகரன் கட்சி உறுப்பினர்களுக்கு, உறுப்பினர்
அட்டை வழங்கிப் பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படனர்.
   கொடுமுடி- பிலிக்கல்பாளையம் இடையே காவிரி ஆற்றில் தடுப்பணையோடு
சேர்ந்த போக்குவரத்தி்ற்கு பயன்படும் வண்ணம் பாலம் அமைக்க வேண்டும்.
கொடுமுடியில் அரசு கல்லூரியும், தொழிற்பேட்டையும் அமைக்க வேண்டும்.
இரயில் நிலையம் எதிரில் உள்ள காலி் இடத்தில் கட்டணக் கழிப்பிடம் அமைக்க
வேண்டும்.
   தளுவம்பாளையம் சாலையில் கொட்டப்படுள்ள பாசன வாய்க்காலில் இருந்து
தூர் வாரிய மண்ணை அப்புறப் படுத்த வேண்டும். நுழைவு பாலம் அருகில் உள்ள
காலிங்கராயன் உபரிநீர் வரும் வாய்க்காலை ஆழப்படுத்தியும்,
அகலப்படுத்தியும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்