கர்நாடாகவை சேர்ந்த ரெட்டி சகோதரர்களின் சட்டவிரோத சுரங்க தொழிலுக்கு
எதிரான நடவடிக்கையை செப்டம்பர் 5ம் தேதி சி.பி.ஐ எடுத்தது.
அதிரடியாக ஜனார்த்தன ரெட்டியையும் இவரது சுரங்க தொழிலின் மேலாளராக இருந்து
வந்த ரெட்டியின் மைத்துனர் ஸ்ரீனிவாச ரெட்டியையும் கைது செய்தது சி.பி.ஐ.
தொடர்ந்த ரெட்டி சகோதரர்களின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வந்த
சி.பி.ஐ பெல்லாரியில் உள்ள வங்கியில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் வங்கியில்
இருந்த மொத்த லாக்கர்கள் 350 ல் 200 லாக்கர்கள் ரெட்டி சகோதரர்களுக்களின்
வகையறாக்களுக்கு சொந்தமானதை கண்டுபிடித்துள்ளது விசாரணை மேலும்
தொடர்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக