பாகிஸ்தானில் ராணுவத்துக்கும் தலீபான் தீவிரவாதிகளுக்கும் நடந்த மோதலில்
பாகிஸ்தானில் உள்ள தபோரி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனைச்சாவடியில் பாகிஸ்தான்
ராணுவவீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தை நோக்கி தலீபான்கள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இதனை எதிர்கொண்ட ராணுவ வீரர்களும் எதிர்தாக்குதலை நடத்தினர்.
இந்த மோதலில் 18 பேர் பலியாகினர்.
இதேபோல ஈரானில் உள்ள தப்பான் புனித ஸ்தலத்துக்கு
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் வசிக்கும் ஷியா முஸ்லீம் பிரிவினர்
சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த பஸ் ராக்கெட்லாஞ்சர் தாக்குதல் மற்றும் எந்திர துப்பாக்கிகளின்
தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் அந்த பஸ்ஸில் பயணம் செய்த 45 பேரில், 26 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மூன்றுபேர் வழியில் இறந்தனர்.
வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த இரு சம்பவங்களிலும் மொத்தம் 47 உயிர்கள் பலியாகின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக