ஈரோட்டில்
காங்கிரஸ் கட்சிக்கான 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணி துவங்கியது.
காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்ற இலக்கு அக்கட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி மாவட்டத்தின் பல பகுதிகளில் துவங்கியுள்ளது. ஈரோடு திண்டல் மலை பகுதியில் உள்ள 35 வார்டில் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது.
இதில் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் கே.சி. பழனிச்சாமி, மண்டல தலைவர் திருச்செல்வம்,பாஷா ஆகியோர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக