வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 13 நவம்பர், 2013

குமாரபாளையத்தில் தாளாளர் தினவிழா பேரணி.


  ரோடு அருகே உள்ள குமாரபாளையத்தில் 
தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணி நடத்தினர்.

ஈரோடு அருகே உள்ள குமாரபாளையத்தில் ஜே.கே.கே நடராஜா கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களை ஜே.கே.கே நடராஜா துவக்கினார். அவரது 88 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்  நிறுவனர் நாள் கொண்டாடப்பட்டது.
விழாவில் ஜே.கே.கே கல்வி நிறுவனங்களை சேர்ந்த மேல்நிலைபள்ளி  மாணவ மாணவிகள் சைக்கிள் பேரணி நடத்தினர். பேரணி பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலிருந்து புறப்பட்டு குமாரபாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளின் வழியாக பள்ளியை அடைந்தது.

பேரணியில் உடல் உறுப்புதானம், கண்தானம், இரத்ததானம், மரம் வளர்ப்பு, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஆகியவை குறித்த பதாகைகளை மாணவ மாணவிகள் ஏந்தி சென்றனர்.

முன்னதாக பேரணியை  டி.எஸ்.பி ஆறுகம், பவானி காவல்துறை ஆய்வாளர் சண்முகம், ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவி செந்தாமரை, மேலாண்மை இயக்குநர்ஓம் சரவணா,நிர்வாக இயக்குநர் சிங்காரவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்