வருகை தந்தமைக்கு நன்றி.. !

புதன், 13 நவம்பர், 2013

அந்தியூர் ஆதர்ஷ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.





 ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஸ் வித்யாலயா
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்   அறிவியல் கண்காட்சி, அறிவியல் நாடகம், மற்றும் கணிதவியல்  கண்காட்சி திறப்பு விழா நடந்தது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சண்முகம் திறந்து வைத்தார்.

  கண்காட்சியில் கல்வித்திறன், அறிவுத்திறன், கலைத்திறன், ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் பங்கு பெற்றிருந்தன.

சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விவசாயம் தொழில்நுட்பம் குறித்த நாடகத்தை நடத்தினர். இதனை ஆட்சியர் சண்முகம்  இரசித்து பார்த்து மாணவிகளை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அய்யணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மாலதி, சிவாஜி,  ஐடியல் ஆதர்ஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வமணி சிவலிங்கம், நிர்வாக அலுவலர் நாட்ராயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்