ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள எண்ணமங்கலம் மாரியம்மன்கோவில் திடலில் வருகிற 19 ம் தேதி பகல் 11 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் தலைமை வகிக்கிறார். முகாமில் அனைத்து துறை அலுவலர்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இந்த முகாமில் கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக