வருகை தந்தமைக்கு நன்றி.. !

சனி, 27 ஆகஸ்ட், 2011

தமிழுக்கு மரியாதை தந்த தைவான்....

                                                                             
                                                 தமிழுக்கு மரியாதை தந்த தைவான்....


தைவான் நாட்டைச்சேர்ந்த கிறிஸ்யோ என்ற சிற்பியால் த மூன்றரை டன் எடை கொண்ட

அமைதியின் சின்னமான மணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மணியில்

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான மணியாக உருவாக்கப்பட்ட இதனை தைவான் அரசு தனது  மற்றும் சீனா ஆகிய  இரு

  நாட்டின் எல்லைகளும் சந்திக்கும் இடத்தில் பொருத்தியுள்ளனர்.
 

 சீனாவின் ஆதிக்கத்தில் இருக்க விரும்பால் தன்னை தனிசுதந்திர நாடாக அறிவித்துக்கொண்ட

 தைவானை அழிக்கும் நோக்குடன் கடந்த 58 ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தில் சீனபடைகள்

 தைவானின் மீது ஏவுகணைகளை வீசின.

  தொடர்ந்து 44 நாட்கள் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள், எண்ணிக்கையில் 5 லட்சமாக இருந்தன.

   இந்த ஏவுகணைகளிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த அமைதிக்கான

   மணி என்பது குறிப்பிடத்தக்கது.

     கடந்த 49 ம் ஆண்டில் இருந்து சுதந்திர நாடாக செயல்பட்டுவரும் தைவானுக்கு  விடுதலைப்புலிகளுக்கும்,

 இலங்கை அரசுக்கும் சமாதானம் செய்விக்க வந்த நார்வே நாடு

சமாதானத்துக்கான பரிசை தர சீனாவைச்சேர்ந்த மனிதஉரிமையாளருக்கு தரவந்தது. சீன அரசு அவர்

மீது நடவடிக்கை எடுக்க முயன்றபோது அவருக்கு தைவான்  அடைக்கலம் தந்தது.

  சமாதானப்பரிசை தரவந்த நார்வே நாட்டின் மீது கோபம் கொண்ட சீனா அந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தது.

நார்வே நடத்திவந்த இலங்கை சமாதானபேச்சை குலைக்கும் நோக்கத்துடன் இலங்கைக்கு

 பல லட்சக்கணக்கான ஏவுகணைகளை வழங்கியது.

அந்த ஏவுகணைகள் தான் தமிழர்கள் மீது வீசப்பட்டு தமிழர்களை கொன்று குவித்தது.

   இதற்கு பதிலடி தரும் விதமாக தற்போது தைவான் அரசு சீனாவின் ஏவுகணைகளை பயன்படுத்தி தயாரித்த

மணியில் அமைதி  என்ற சொல்லை பொறித்து சீனாவின் எல்லைப்பகுதியில் உள்ள கியான்மென்தீவில் நிறுத்தி உள்ளது.

இந்த தீவானது கடந்த 100 ஆண்டுகளாக ராணுவ மையமாக செயற்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் அரவணைப்பில் உள்ள இந்த தீவில் தற்போது பத்தாயிரம் வீரர்கள் பாதுகாப்பில் உள்ளனர்.

அந்த பத்தாயிரம் பேர் பாதுகாப்பில் தற்போது தமிழ் மணி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

பக்கங்கள்